districts

img

திண்டுக்கல்: பேரூராட்சி வார்டுகளில் சிபிஎம் வேட்பாளர்கள் வாக்குச்சேகரிப்பு

திண்டுக்கல், பிப்.15- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூ ராட்சிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பா ளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டனர். நெய்க்காரபட்டி பேரூராட்சி 10 ஆவது வார்டில் எம்.முத்துலட்சுமி வாக்கு சேக ரித்தார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.அருள்செல்வன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கன்னிவாடி பேரூராட்சி 10வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் அப்துல்ஹக்கீம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.வசந்தாமணி, ஒன்றியச்செயலாளர் கே.எஸ்.சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் 1ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் மணிமாலதிக்கும் வாக்கு சேகரித்தனர். பாளையம் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் வள்ளி,  2 ஆவது வார்டில் போட்டியிடும் சேகர் ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலா ளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற் குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றி யச்செயலாளர் ஏ.ராஜரத்தினம் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். எரியோடு பேரூராட்சி 7 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் காம லட்சுமி, 5 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்;பாளர் கல்பனா ஆகியோர் வாக்கு சேகரித்தனர். ஒன்றியச்செயலாளர் பெரியசாமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முத்துச்சாமி:, கிருஷ்ணமூர்த்தி, திமுக முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜீவா, ஆகி யோர் பங்கேற்றனர்.