districts

img

அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தேசியக்கொடி ஏந்தி உறுதிமொழி ஏற்பு

தேனி ,ஜன.28- குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் தேசிய கொடியேந்தி உறுதி ஏற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது . தேனியில் சிஐடியு  மாவட்ட செயலாளர் எம்.இராமச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்  எம்.நாராயணன் (தொமுச), முருகேசன், என்.ரவி முருகன்  (ஏஐடியுசி ).  சி. முருகன் (சிஐடியு ) ஆகியோர் பேசினர். மற்றும் எம். முருகன் (தொமுச) ஜி.சண்முகம், ஏ.முருகவேல், டி.ஜெயபாண்டி, தேவராஜ் (சிஐடியு)  சென்றாயபெருமாள், எம்.எஸ்.பி.ராஜ்குமார், பாண்டி  (ஏஐடியுசி) ஆகியோர் பங்கேற் றனர்.

விருதுநகர்

விருதுநகர் பழைய பேருந்து  நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எல்.பி.எப் மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமை யேற்றார். மாவட்ட செயலாளர் ராஜசெல்வம், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஜி.வேலுச்சாமி, ஆர்.பாலசுப்பிரமணியன், எம். கார்மேகம், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணி யன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முத்துவேலு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.விஜயபாண்டி, ஏஐடியுசி சார்பில் பாண்டியன்  உட்பட பலர் பங்கேற்றனர். சிவகாசி பேருந்து நிலையம்  முன்பு திமுக நகர செயலாளர்  எம்.காளிராஜன் தலைமையேற் றார். ஏஐடியுசி சார்பில் க.சமுத்தி ரம், ஐஎன்டியுசி சார்பில் முரு கேசன், விசிக சார்பில் செ.பாண்டி யராசன், சிஐடியு மாவட்ட செய லாளர்  பி.என்.தேவா ஆகியோர்  பேசினர். நிறைவு செய்து பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.முருகன் ஆகியோர் பேசினார்.   சாத்தூரில் தமுஎகச சார்பில்  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு  சிஐடியு தலைவர் பி.பாலசுப்பு தலைமையேற்றார்.  மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் சிறப்புரையாற்றினார்.  அருப்புக்கோட்டையில் சிஐடியு கன்வீனர் தமிழ்செல்வ ராஜ் தலைமையில் எல்.பி.எப் சார்பில் சுந்தர்ராஜ், எல்.எல்.எப் சார்பில் குமரவேல், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.ராமர், சுரேஷ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் 

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச்செயலாளர் கே.ஆர்.கணேசன், ஏஐடியுசி சங்க தலைவர் ஜெயமணி, மற்றும் எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி. தலைவர்கள் பங்கேற்றனர். சின்னாளப்பட்டியில் ஆத்தூர் ஒன்றிய சிஐடியு கன்வீனர் வி.கே. முருகன் மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.பால்ராஜ் ,ஏ.ஐ.டி. யூசி சார்பில் ராஜாமணி உள்ளிட் டோரும் வத்தலக்குண்டில் சிஐடியு மாவட்ட நிர்வாகி அழகர் சாமி மற்றும்  நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.