தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பகுதிநேரமாகப் பணியாற்றும் உடற்கல்வி, ஓவியம், கணினி உட்பட எட்டு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முழு நேரப் பணி வழங்கவேண்டும். மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் வழங்கவேண்டுமென வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரில் பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ந.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மா.சாமுண்டீஸ்வரி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.