தஞ்சாவூர், மே 23- தஞ்சாவூர் மக்கள் நலப் பேரவை நிர்வாகி வெ.ஜீவகுமார், தஞ்சை மாவட்ட ஆட்சியரி டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது: “தஞ்சாவூர் திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா பல்கலைக்கழக நிறுவனம் அரசுக்குச் சொந்தமான சுமார் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கி ரமித்து, 24 கட்டிடங்களை கட்டியுள்ளது. தமிழக அரசின் சிறைத் துறைக்கு சொந்த மான 31 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், கல்வி நிலையங்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை பொறுத்து, அவை வேறு நிலம் கொடுத்தால் அதனை ஏற்றுக்கொண்டு, ஆக்கிரமிப்பை அனு மதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வரு வாய்த் துறை நிலை ஆணை பிரிவு 26 (A)இல் திருத்தம் கொண்டு வருகிறது. இது அப்பட்ட மாக சாஸ்த்ராவின் ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கவும், நியாயப்படுத்தவும் கொண்டு வரப்படக் கூடியது ஆகும். எனவே, இந்நிலை ஆணையில் செய்யப் பட்ட திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். சாஸ்திரா ஆக்கிரமிப்பை மீட்கும்படி பொது நலம் கருதி கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.