districts

img

பழனி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை ரேக்குகளில் நிறுத்துக!

பழனி, செப்.23- பழனி பேருந்து நிலை யத்திற்கு வந்து செல்லும்  அனைத்து பேருந்துகளை யும் ரேக்குகளில் நிறுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்  என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழன் (செப்.21)  காலை வட்டார போக்கு வரத்து ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது.  இதுதொடர்பாக சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பகத்சிங் தலைமையில், பழனி ஒன்றியச் செயலா ளர் கண்ணுச்சாமி, நகரப்  பொருளாளர் அய்யனார், நகர்க் குழு உறுப்பினர் காளி முத்து ஆகியோர் அளித் துள்ள மனுவில், ‘‘பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக் தர்கள் வந்து செல்கின்றனர்.  இவர்கள் அனைவரும் பெரும்பாலும் பேருந்து களின் மூலமாகவே வரு கின்றனர். இவ்வாறு பேருந்  துகளின் மூலமாக வரும் பக்  தர்கள் பழனியில் அமைந்  துள்ள பேருந்து நிலையத்  தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள பேருந்துகளில் ஏறு வதற்கு மிகுந்த சிரமப்படு கின்றனர்.  குறிப்பாக, பேருந்துகள் அனைத்தும் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள ரேக்குகளில் நிறுத்தாமல் பேருந்து நிலையத்தின் நடு வில் நிற்பதால், மாற்றுத்  திறனாளிகள், வயதானவர் கள், கர்ப்பிணி பெண்கள்  ஆகியோர் பேருந்துகளில் ஏற மிகுந்த சிரமப்படுகின்ற னர். எனவே, மாற்றுத் திற னாளிகள் உள்ளிட்ட அனை வரின் வசதிக்காக பழனி பேருந்து நிலையத்திற்குள் வரும் அனைத்து பேருந்து களையும் அவர்களுக்குரிய ரேக்குகளில் நிறுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.  இதுதொடர்பாக பல முறை போக்குவரத்து கழக  அதிகாரிகளிடம் முறை யிட்டும் போராட்டம் நடத்தி யும் எவ்வித பலனும் இல்லை. எனவே, மாற்றுத்  திறனாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப் பட்டிருந்தது.