நீதிமன்றத்தில் இ-பைலிங் தாக்கல் முறைக்கு எதிர்ப்பு
திருவில்லிபுத்தூர், செப்.8- திருவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு விருதுநகர் எழுத்துப் பணியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வகுமார், செயலாளர் முத்துமணி, பொருளாளர் குருநாதன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “மாவட்ட நீதிமன்றங்களில் முன் ஜாமின், உள்ளிட்ட 90 சதவீத வழக்குகளுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இ-பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பெரியாறு அணையில் 400 கன அடி நீர் திறப்பு : மின் உற்பத்தி 36 மெகாவாட்டாக உயர்வு
தேனி ,செப்.8- முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு 400 கன அடியாக உயர்ந்ததால் லோயர் கேம்பில் மின் உற்பத்தி 36 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது . தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மதுரை மாநகர குடிநீர் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு பின்னர் 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் தண்ணீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இதனால் லோயர் கேம்பில் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.590 கன அடி நீர்வரத்து உள்ளது . வைகை அணையின் நீர்மட்டம் 47.08 அடி யாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 9 கன அடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.04 அடியாக உள்ளது. 4 கன அடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழையளவு ; பெரியாறு 20.6, தேக்கடி 14.6, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.6, சண்முகாநதி அணை 2.4, போடி 5.6, வைகை அணை 1.4, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 2, வீரபாண்டி 4.2, அரண்மனைப்புதூர் 4.8, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
நீதிமன்றங்களை புறக்கணித்த வழக்கறிஞர்கள்
திருவில்லிபுத்தூர், செப்.8- ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர். இந்தியத் தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மொழிமாற்றம் செய்து, இந்தியில் திருத்தம் செய்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இ-பைலிங் முறையைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்கள் வியாழன். வெள்ளி இரண்டு தினங்கள் முழுமையாக நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர்.
சாமியார் உருவ பொம்மை எரிப்பு
மதுரை செப் 8- தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி யை தவறாகப் பேசிய வட இந்திய சாமியாரின் உரு வப்பொம்மையை மதுரை மாவட்டம் கருப்பட்டியில் திமுக நிர்வாகி பண்ணைசெல்வம் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் எரித்தனர்.
பாலியல் தொந்தரவு மருத்துவர் கைது
சாத்தூர், செப்.,8- சாத்தூரில் தனியார் மருத்துவமனை செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். சாத்தூர் அருகே வசிக்கும் செவிலியர் ஒருவர் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அதே மருத்துவமனையில் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர் குழந்தைகள் நலப்பிரிவில் சிறப்பு மருத்துவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். செவிலியருக்கு மருத்துவர் ரகுவீர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவர் உடன்படாததால் அவரைத் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியர் மருத்துவமனை நிர்வாகியிடம் புகார் தெரிவித்தாராம். ஆனால், அவர் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து செவிலி யர் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவர் ரகுவீரை கைது செய்தனர்.
கொலை மிரட்டல் விடுத்த சாமியார் பரமாஹன்ஸ் ஆச்சார்யா மீது புகார்
சிவகங்கை, செப்.8- உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என அறிவித்த சாமியார் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. சிவகங்கை நகர் தி.மு.க. செயலாளரும், நகரசபைத் தலைவருமான துரை ஆனந்த் தலைமையில் நகர் இளைஞரணிச் செயலாளர் அயூப்கான், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், துபாய் காந்தி, ராமதாஸ், இலக்கிய அணி மாவட்டத் துணைத்தலைவர் ராஜபாண்டி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு சேர்ந்த சதீஷ் மற்றும் சரவணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை சந்தித்து புகார் மனுக் கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியதை சிலர் ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிரானது என்பதைப் போல ஒரு வாதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பரமாஹன்ஸ் ஆச்சாரியார் என்பவர் அமைச்சர் உதயநிதியின் படத்தை வாளை வைத்து கிழித்து அதை தீயிட்டுக் கொளுத்தி அவரது தலைக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என்று அறிவித்து, மிரட்டல் விடுத்துள் ளார். மக்கள் மனதில் பகை உணர்வைத் தூண்டும் வகையி லும் பேசி கொலைக் மிரட்டல் விடுத்த பரமாஹன்ஸ் ஆச்சார்யா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மின் பயனீட்டாளர் குறைதீர் முகாம்
மின் பயனீட்டாளர் குறைதீர் முகாம் பழனி: பழனியில் மின் பயனீட்டாளர் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியச், செயற்பொறியாளர் பழனி அலுவலகத்தில் செப்டம்பர் 12- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்களின் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு மேற்பார்வைப் பொறியாளர்- திண்டுக்கல், நேரில் வந்து குறைகளைக் கேட்டறிய உள்ளார் பழனி கோட்டத்தைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் தங்களது மின் வாரியம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்துறை அருகே மருத்துவ முகாம்
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை- கோட்டைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கலை ஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனிச்சாமி, பிள்ளையார்நத்தம் ஊராட்சித் தலைவர் தேன்மொழி ஆகியோர் முகாமைத் துவக்கி வைத்தனர். முகாமில் சர்க்கரை, ரத்த அழுத்தம், காசநோய், தொழுநோய், இதய நோய், எச்.ஐ.வி., பரிசோதனை, மலேரியா, டெங்கு நோய்களுக்கான பரிசோதனைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டது. முகாமில் செந்துறை, பிள்ளையார்நத்தம் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
போலி பணி ஆணை மூலம் ரூ 73 லட்சம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
தேனி, செப்.8- ரயில்வேத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியாக பணி ஆணை வழங்கியும், ரயில் நிலையத்தில் உணவகம் நடத்த உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 73 லட்சம் மோசடி செய்ததாக சின்னமனூ ரைச் சேர்ந்த மூன்று பேர் மீது தேனி மாவட் டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள சருத்துப் பட்டியைச் சேர்ந்தவர் மாயன் (38). இவருக்கு திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் உண வகம் நடத்துவதற்கு உரிமம் பெற்றுத் தருவ தாகவும், இவரது உறவினர்கள் ஒன்பது பேருக்கு ரயில்வேத் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, சின்னமனூ ரைச் சேர்ந்த அய்யனார் மகன் ஜமீன்பிரபு, அவரது சகோதரர் ஈஸ்வரன், ஈஸ்வரனின் மனைவி வனிதா ஆகியோர் கடந்த 2021-ஆம் ஆண்டு மாயனிடமிருந்து மொத்தம் ரூ.73 லட்சம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சில நாட்களில் ஜமீன்பிரபு, மாயனின் கைபேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் ரயில்வே பணி நியமன ஆணைகளை அனுப்பி வைத்துள்ளார். இந்த பணி நியமன ஆணைகள் போலியானது என்பது ரயில் வேத் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது தெரியவந்தது. இந்த நிலையில், ஜமீன்பிரபு உள்ளிட்ட மூன்று பேரும் தன்னிடம் மொத்தம் ரூ.73 லட்சம் பெற்றுக் கொண்டு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தராமலும், ரயில் நிலையத்தில் உணவகம் நடத்துவதற்கு உரிமம் பெற்றுத் தராமலும் மோசடி செய்து விட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாள ரிடம் மாயன் புகார் அளித்தார். மாவட்டக் கவல்கண்காணிப்பாளர் உத்தர வின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினர் ஜமீன்பிரபு, ஈஸ்வரன், வனிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விண்வெளி-தொழில் முனைவு கருத்தரங்கு
பழனி, செப்.8- பழனி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் அனைத்துத்துறையில் பயிலும் மூன்றாமாண்டு மாண வர்களுக்காக “விண்வெளி மற்றும் தொழில்முனைவு” என்ற தலைப்பில் கருத்தரங்கு 08.09.2023 அன்று பயில கத்திலுள்ள “தொழில் நிறுவன கூட்டாண்மை அமைப்பு” மூலம் நடைப்பெற்றது. இப்பயிலகம் இணை ஆணையர்-செயல்அலுவலர் மற்றும் தாளாளர் அவர்க ளின் அனுமதியின் பேரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐஎஸ்ஆர்ஒ, மகேந்திரகிரியில் துணைத் தலைவராகப் பணியாற்றும் அறிவியலாளர் கே.வேல்முருகன், கருத்தரங்கைநடத்தினார். அவுட்ரீச் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் இஸ்ரோவின் சாதனைகள் பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியை பயிலக முதல்வர் ஆர்.கந்தசாமி துவக்கி வைத்தார். இயந்திரவியல்துறைத் தலைவர் டி.பத்மநாபன், முதலாமாண்டு துறைத்தலைவர் எஸ்.என். ராஜன், அலுவலகக் கண்காணிப்பாளர் பி.ரவீந்திரன், துறைப் பொறுப்பாளர்கள் எம்.மகேந்திரன், என்.மகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி
சின்னாளபட்டி, செப்.8- மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்து காந்திகிராம பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ஆறு மாத காலம் கிராமங்களில் தங்கி விவசாயிகளை நேரில் சந்தித்து பல்வேறு பயிற்சி களையும் ஆலோசனைகளையும் பெற்று வரு கின்றனர். இதனொருபகுதியாக, மாணவர்கள் அருண் குமார், விஷ்வா அரவிந்த், அஸ்வின், நிவேதன், கனிஷ்கர் ஆகி யோர் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள மாங்கரை, அம்மாப்பட்டி ஆகிய கிராமங்களில் தங்கி விவசாயிக ளோடு இணைந்து பல்வேறு வகையான பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இப்பகுதியில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தை அதிகளவு தாக்கும் படைப்புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்தி தடுக்கும் வழி முறைகள், வேதி உயிர்கொல்லி மருந்துகளைக் குறைப்பது, மண்ணின் ஊட்டச்சத்தை சிதைக்காமல் மண்ணை நிலையாக பாதுகாப்பது உள்ளிட்ட பயிற்சி களை விவசாயிகளுக்கு மாணவர்கள் அளித்தனர். இப்பயிற்சி முகாமில் தமிழக அரசின் உழவன் செயலி பற்றிய முக்கியத்துவத்தையும், அதனைப் பயன்படுத்து குறித்த பயிற்சியையும் விவசாயிகளுக்கு அளித்தனர்.
நியாமேக்ஸ் நிறுவனத்தில் ரூ.17,25 கோடியை இழந்ததாக 150 பேர் புகார்
மதுரை, செப். 5- மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏதுவாக வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுவதாகப் பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம் ஏராளமானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடாகப் பெற்றுத் திரும்பத்தராததால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளா தாரக் குற்றப்பிரிவில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல்துறை நிதி நிறுவன இயக்குநர்கள் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்ற னர். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் புகாரளிக்க வசதியாக ஏற்கெனவே மதுரை மற்றும் விருதுநகரில் இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் ஏராளமானோர் புகாரளித்துள்ளனர். இந்தநிலையில் நியோமேக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐந்து பிரதான நிறுவனங்கள் மற்றும் 20 துணை நிறுவனங்களில் முதலீடு செய்த முத லீட்டாளர்கள் புகார் அளிக்க வசதியாக வெள்ளிக்கிழமை மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி ராப்பள்ளி, கோயம்புத்தூர் உட்பட 17 மாவட்டங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் நியோ மேக்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழி பத்திரங்கள், ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் ரூ.17.25 கோடி இழந்துள் ளதாக 150 பேர் புகாரளித்தனர்.
ஒரே நாடு, ஒரே தோ்தல்: செயல்படுத்த இயலாது மாணிக்கம் தாகூா் எம்.பி.
விருதுநகர், செப்.8- ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தை செயல்படுத்த இயலாது என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கூறினா். காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் ஒராண்டு நிறைவு விழா நடைபயணம் சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த மாணிக்கம் தாகூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜக அரசு மத அடிப்படையிலான விவாதங்களை நடத்தி வருகிறது. இது தவறானது. காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் பாதுகாத்து வருகிறது. இந்தியா என்பதை பாரத் எனக் கூறி, பாஜக அரசு விவாதப் பொருளாக்கிவிட்டது. எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயா் வைத்ததால், பிரதமருக்கு இந்தியா என்ற பெயா் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஊராட்சிக்கும், மக்கள வைக்கும் தோ்தல் நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தை செயல்படுத்த இயலாது இவ்வாறு அவர் கூறினார். பின்னா் அவா் தலைமை அஞ்சல் நிலை யம் முன்பு உள்ள காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, நடைபய ணத்தை தொடக்கினாா். இந்த நடைபயணம் முஸ்லிம் தெரு, காமராஜா் பூங்கா, நான்கு ரத வீதி வழியா கச் சென்று, மீண்டும் தலைமை அஞ்சல் நிலையம் வந்தடைந்தது. இதில் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், சிவகாசி மாநகரக் காங்கிரஸ் தலைவா் சோ்மதுரை, மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடா்பாளா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.