மதுரை, நவ.6- 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக வழங்காமல் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்கிட கோரியும், தமிழ கத்திற்கு வழங்க வேண்டிய 2,696 கோடியை உடனே வழங்கிட கோரியும், ஒன்றிய அரசினை கண்டித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்க ளின் சார்பில் கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாயிகள் சங்க தாலுகாச் செய லாளர் ஏ.ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் எஸ்.பி. இளங்கோவன் துவக்கி வைத்தார். மாவட்டப் பொரு ளாளர் வீ.அடக்கிவீரணன், மாவட்ட நிர்வாகி பி.எஸ். ராஜாமணி, விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகாச் செயலாளர் தனசேகரகன் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் வாழ்த்திப் பேசினார். விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி. உமாமகேஸ்வரன் நிறை வுரையாற்றினார். ஒன்றியத் தலைவர் குமரன் நன்றி கூறி னார்.