districts

img

குல்லூர் சந்தையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

விருதுநகர், மார்ச்.25- விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தையில் 1000 பங்குதாரர்களை கொண்ட பயறு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலை யங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி திறந்து வைத்தார். கௌசிகா நதி உழவர் உற்பத்தியாளர் நிறு வனம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதை வலிமைப்படுத்த ரூ.13.28 லட்சம் செல வில் சிறுதானியம் அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் ஆகி யவை ரூ.20 லட்சம் மானியத்தில் வழங்கப் பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இயக்குநர் உத்தண்டராமன், நேர்முக உதவியாளர் சங்கர்  எஸ்.நாராயணன், செயற்பொறியாளர் டேனிசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.