districts

img

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி அக்.16 சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

மதுரை, அக்.4- மதுரையில் தமிழக தொழில் துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பு சார்பில் தமிழகத்தில் உள்ள  அனைத்து தொழில் துறை சார்ந்த  சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ் உள்ளிட்டோர் செய்தியா ளர்களை சந்தித்தனர்.  அப்போது அவர்கள் கூறு கையில், ‘‘அரசு தொழில்துறை நிறு வனங்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில் அக்டோபர் 9  அன்று அனைத்து தொழில்துறை சார்ந்தவர்கள் தொழிற்சாலை களில் கருப்பு கொடி ஏற்றியும் கருப்பு பட்டை அணிந்தும் கோரிக்கை மனுவை குறைதீர் முகாம் நாளில் தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.  இதனை தொடர்ந்து அக்டோபர்  16 அன்று தமிழ்நாடு முதல்வரின் நேரடி கவனத்தை ஈர்க்கும் விதமாக  தமிழக தொழில் துறையினர் அனை வரும் சென்னையில் மாநில தழு விய உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையின் போது  அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டு எங்களது கோரிக்கை களையும் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் 30 சதவிகிதம் சிறு, குறுந்தொழில் முடங்கிவிட்டது. இது நீடித்தால் முழுமையாக தொழில்துறை முடங்கும் நிலை உள்ளது, எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் போர்க்கால அடிப்படை யில் உரிய பேச்சுவார்த்தை நடத்த  வேண்டும், மேலும் மின் கட்டணம்  உயர்வை திரும்பப் பெற வேண் டும். இக்கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்  கப்படும். உண்ணாவிரதப் போராட்  டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்பார்கள்’’ என கூறி னர்.