districts

img

தேசிய லங்காடி போட்டிக்கு நத்தம் வீரர்கள் தேர்வு

நத்தம், மார்ச் 9- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் தேசிய லங்காடிபோட்டிக்கு தேர் வாகியுள்ளார். மார்ச் 6 அன்று முது குளத்தூர் பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான லங்காடி போட்டி தேர்வுக் குழுத் தலைவரான தமிழக அணி தலைமை பயிற்சி யாளர் பாலசுந்தரம், இந்திய லங் காடி அணி தலைவர் தேவசித்தம் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.இத்தேர்வில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர்.இப்போட்டியில் 60 பேர்தேர்வு செய்யப்பட்டனர்.இதில் நத்தம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி (25).சாருமதி (வயது 13)ஆகியோர் தேர்வாகியுள்ளார்.தேர்வாகியுள்ள  வீரர்கள் அனைவரும் கேப்டன் சரண் தலைமையில் மார்ச் 25 அன்று ராஜஸ்தானில் நடைபெறும் தேசிய போட்டியில் பங்கேற்கின்றனர்.