மதுரை மாநகராட்சி அனுப்பானடி அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடத்தை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி , தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். அனுப்பானடியில் மாநகராட்சி தூய்மை பணிகளுக்கான வாகனங்களை கொடியசைத்து பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து வண்டியூர் கண்மாய் ( மேற்கு மற்றும் வடக்கு பகுதி) அழகுபடுத்துதல் .மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான அடிக்கல் நாட்டினார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. சௌ. சங்கீதா, , மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் கே. ஜே.பிரவீன் குமார், துணை மேயர் டி. நாகராஜன் .சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் மற்றும் மண்டலத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.