மதுரை, மார்ச் 15- மதுரை மாவட்டம் மேலூர் - மணப் பட்டி அரசு பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரி யர், பள்ளிக்கல்வித்துறை மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டக் குழு சார் பில் மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய் தலைமையில், மாவட்டத் தலைவர் க.பிரேமலதா, செயலாளர் செ.முத்துராணி ஆகி யோர் திங்களன்று மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனிஸ் சேகரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மணப்பட்டி கிரா மத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு பாலி யல் சீண்டல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், அமைப் பின் சார்பில் நேரடியாக மாணவி களைச் சந்தித்தோம். அப்போது மாணவிகள் கூறுகை யில், அறிவியல் ஆசிரியர் பாரதி பள்ளி வளாகத்திற்குள் போதையில் வருவ தும், மாணவிகளை பாலியல் சில்மிசம் செய்வதும், ஆபாச வார்த்தை களைப் பிரயோகிப்பதும், பள்ளி நேரத்திலேயே செல்போனில் ஆபாச படங்களைப் பார்ப்பதும் உள்ளிட்ட அநாகரிகமான செயல்களில் ஈடுபடு வதாக கூறினர்.
இதன் அடிப்படையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், குழந்தைகள் நலக்குழு ஆணையர் ஆகியோரிடம் மனுக் கொடுக்கப் பட்டது. அறிவியல் ஆசிரியர் பாரதி மீது போக்சோ வழக்கு பதிவு செய் யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பள்ளி மாணவிகளை பல நாட்களாக அறிவியல் ஆசிரியர் பாரதி என்பவர் பாலியில் சீண்டல் செய்ததை மாணவிகள் புகார் பெட்டி யில் புகார் அளித்தும், பெற்றோர்- ஆசிரியர் கழகத்திற்கு நடந்தவற்றைத் தெரிவித்தும் உள்ளனர். இதன் பேரில் பெற்றோர்-ஆசிரியர் கழ கத்தின் சார்பில் மதுரை மாவட்ட கல்வி அலுவலரிடம், 2022 பிப்ரவரி 26 அன்று எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கப் பட்டது. அந்த மனுவின் மீது மாவட்ட கல்வி அலுவலர், உரிய நடவடிக்கை எடுக்கா மல், அதே பள்ளியில் மீண்டும் அறி வியல் ஆசிரியரை பணியில் அமர்த்தி யதால் மீண்டும் மீண்டும் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான கொடுமை நடந்துள்ளது.
எனவே, நடவடிக்கை எடுக்காத மாவட்ட கல்வி அலுவலர் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் கொடுத்தும் குழந்தைகள் நலக்குழுவும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதால், மீண்டும் மீண்டும் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதோடு, மனரீதியாக துன்பு றுத்தலுக்கும், மன உளைச்சலுக்கும் படிப்பில்கூட கவனம் செலுத்த முடி யாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, மாணவிகளுக்கு உரிய நீதியும், நிவாரணமும் கிடைக்கச் செய்திட வேண்டும், வழக்கு விசார ணையை காலம் தாழ்த்தாமல் உரிய காலத்தில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளிக்கு தண் டனை வழங்கப்பட வேண்டும். வழக்கு நடைபெறுகிற காலத்தில் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் புகைப்படங் களோ, பெயர்களோ எந்தவிதமான ஊடகங்களிலோ வெளிவராத வண்ணம் உரிய கவனத்துடன் குழந்தைகளின் நலன்களை பாது காப்பதையும் உறுதி செய்ய வேண் டும். இதற்கான அனைத்து நடவ டிக்கைகளையும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கமும் மேற்கொள் ளும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.