districts

img

மதுரை 23 ஆவது வார்டில் 509 பயனாளிகளுக்கு ரூ.25.45 கோடியில் மருத்துவ காப்பீடு

மதுரை, ஜூலை 29-  மதுரை மாநகராட்சி 23 ஆவது வார்டில் கடந்த சில  தினங்களுக்கு முன் நடை பெற்ற ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்ட  முகாமில் சுமார் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களு டைய குடும்பத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட் டத்தை பதிவு செய்தனர். இதில் நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 509  பயனாளிகளுக்கு ரூ. 25  கோடியே 45 லட்சம் மதிப்பி லான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டவை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் தலைமை வகித் தார். மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கோ. தள பதி, துணை மேயர் டி.நாக ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், பகுதிக்குழு செய லாளர் வடக்கு - 1 வி. கோட்டைச்சாமி, வடக்கு - 2 ஏ. பாலு, திமுக வட்ட செய லாளர் குரும்பன், வடக்கு மண்டல தலைவர் சரவண  புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், மாயத்தேவன், ரஞ்சித் லோக மணி, முகாம் பொறுப்பாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.