மதுரை, ஆக. 23- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிக ளின் கைப்பேசிகளை திருடிய இரண்டு அரசு ஊழியர் கள் மற்றும் ஒப்பந்த ஊழியர் உள்பட நான்கு பேரை போலீசார் வெள்ளியன்று கைது செய்தனர்.மேலும் கடந்த 8 மாதங்களில் திருடு போன 52 கைப்பேசிகளில் 43 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய அரசு மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் கேரளத்தின் சில மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். இத னால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளிக ளாக 10 ஆயிரம் பேரும் தினசரி வெளி நோயாளிகளாக 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையின் உள் நோயாளிகள் பகுதி மற்றும் உள் நோயாளிகளுக்கு துணையாக இருப்பவர்கள் தங்கும் பகுதிகளில் கைப்பே சிகள் திருடுபோவது அதிகரித்து வந்தது. இதுதொடர்பாக பலர் புகார் அளித்ததன்பேரில் அரசு ராஜாஜி மருத்துவ மனை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். போலீசாரின் கண்காணிப்பில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் கைப்பேசி திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. மேலும் அரசு ஊழியரான ஆறுமுகத்தின் மகன் வடிவேலும் கைப்பேசி திருட்டில் ஈடுபட்டு வந்தார், அவர் மீது 11 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் நோயாளிகள் மற்றும் உறவினர்களின் 52 கைப்பே சிகள் திருடப்பட்டன. இதில் போலீசாரின் தீவிர நடவடிக்கை யில் 43 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரைத் தவிர, இதர ஊழியர்கள் யாருக்கும் கைப்பேசி திருட்டில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் சிலர் மீதும் சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து அவர்கள் தொ டர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் இருவர் கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.