districts

மதுரை முக்கிய செய்திகள்

போடியில் பெண் வனக்காவலர் கொலை:  ஆயுதப்படை  காவலர் சரண்

தேனி, பிப்.13- போடியில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் வனக்காவலரை கழுத்தை நெரித்து கொலை செய்த, ஆயுதப்படை காவலர் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். மதுரை சதாசிவம் நகர், திருவள்ளு வர் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி சரண்யா (27). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவல ராக பணிபுரிந்து வந்தார். போடியில் வனத்துறை அலுவலகம் அருகே வாடகை  வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள  நிலையில், நான்கு வருடம் முன்பு இவ ரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகளும் சரண் யாவின் பெற்றோர் வீட்டில் உள்ளனர். தனியாக வசித்து வந்த சரண்யாவை கொலை செய்துவிட்டதாக மதுரை அனுப்பானடியை சேர்ந்த வேலாயுதம் மகன் திருமுருகன் (27) என்பவர் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் ஞாயிறன்று சரணடைந்தார். இதனை யடுத்து கீரைத்துறை காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர் போடியில் சரண்யா வசித்து வந்த வீட்டில் சென்று பார்த்தபோது சரண்யா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந் தது தெரியவந்தது. விசாரணையில் சரண்யாவும், திரு முருகனும் மதுரை பகுதியில் வசித்து வந்த நிலையில், இருவரும் காவல்துறை யில் சேருவதற்காக பயிற்சி வகுப்புக்கு சென்றதில் பழக்கம் ஏற்பட்டு காத லித்து வந்துள்ளனர். திருமுருகனுக்கும் திருமணமான நிலையில், சரண்யாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் திரு முருகனின் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து திருமுருகன் அடிக்கடி போடிக்கு வந்து சரண்யா வீட்டில் தங்கிவிட்டு செல்வது வழக்கம். சனிக்கிழமை இரவில் திருமுருகன் வழக்கம்போல் வந்துள்ளார். அவர்களுக்குள் திருமணம் செய்வது தொடர்பாக பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் திருமுருகன், சரண்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். திருமுருகன் மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வரு கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போடி நகர் காவல்துறையினர் திருமுருகனை கைது செய்ய மதுரை விரைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் கேரள  நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு

தேனி, பிப்.13- முல்லைப் பெரியாறு அணையில் கேரள நீர்வளத்துறை முதன்மை பொறி யாளர் அலேக்ஸ் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.  பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. தமிழக அதிகாரிகள் அங்கு  தங்கி பணியாற்றுகின்றனர். துணைக் கண்காணிப்பு குழுவில் தமிழக பிரதிநிதி யாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற் பொறியாளர் சாம் இர்வின் உள்ளார். கேரள பிரதிநிதியாக கட்டப்பணை நீர்ப் பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார் உள்ளார்.  இந்நிலையில் கடந்த இரு தினங்க ளுக்கு முன் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், கேரள சட்டசபையில், முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்திற்கு தனி செயற்பொறியாளர் உள்ளார். பெரியாறு அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற் றம் உள்ளிட்ட தகவல்களை தமிழகத்தி டமிருந்து பெற வேண்டிய நிலையில், பெரியாறு அணைக்கு என தனி செயற் பொறியாளர் நியமிக்க வேண்டும் என கூறியிருந்தார்.  இந்நிலையில் வெள்ளியன்று கேரள நீர்வளத்துறை முதன்மை பொறி யாளர் அலெக்ஸ் வர்கீஸ் வள்ளக்கடவு வழியாக பெரியாறு அணைக்கு சென்றார். பின் மெயின் அணை, ஷட்டர் பகுதியை பார்வையிட்டு திரும்பினார். அவருடன் செயற்பொறியாளர் ஹரிக் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற தீயணைப்பு வீரர் பலி

தென்காசி, பிப்.13- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதூர், எம்.ஜி.ஆர். நக ரைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 46). இவர் கடையநல்லூர் தீயணைப்பு நிலை யத்தில் தீயணைப்பு வீரராக பணி புரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்க ளாக காய்ச்சல் இருந்தது. இதற்கு மருந்து கள் சாப்பிட்டும் குணமாகவில்லை. இதனால் குமரேசனை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சனிக்கிழமை இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் எத்தகைய காய்ச்சலால் இருந்தார் என்று மருத்து வர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் விரிவுபடுத்தப்படாத விக்கிரமங்கலம் சாலை போராட்டத்தில் ஈடுபட மார்க்சிஸ்ட் கட்சி முடிவு

மதுரை, பிப்.13- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிர மங்கலம் சாலையை விரிவுபடுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கடந்த ஆண்டு 29 -1- 2020 விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. விக்கிரமங்கலம் முதல் மதுரை மேலக்கால் வழி சாலை, விக்கிரமங்கலம் உசிலம்பட்டி சாலை, விக்கிரமங்கலம் சோழ வந்தான் சாலை, வனப் பகுதிகளில் சாலை யை விரிவுபடுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பல ஆண்டுகளாக அதிகாரிகளிடமும் ஆட்சியரிடமும் தொட ர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.  இந்நிலையில் அந்த சாலை வனச்சர கத்தில் இருப்பதால் வனத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முடிவெடுக்க வேண் டும் என்று கூறி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாலையே போடாமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் பொது மக்களின் தேவைக்கு பேருந்து போக்குவரத்தில் மிகப் பெரிய இடையூறு ஏற்படுகிறது . கடந்த ஆண்டு 3-1-2021 அன்று வனச்சரக அதிகாரி கள் புல தணிக்கை செய்தனர். அதன் பின்னர் ஓராண்டு கடந்துவிட்டது. மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உலக தமிழ் சங்கம் வளாகத்தில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி அன்று மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலை மையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தர நாத், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பி னர் மாணிக்கம் தாகூர், வணிகவரி-பத்திரப் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்க டேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமி நாதன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பி னர் அய்யப்பன், மதுரை மாவட்ட ஆட்சி யர் அனிஸ் சேகர் மற்றும் ஆணையாளர் அதி காரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சாலை குறித்து பேசப்பட் டது. இந்த கூட்டத்திலும் சாலை விரிவாக்கம் குறித்துவனத்துறை அதிகாரிகள் முறை யாக பதில் அளிக்காமல் மேல் அதிகாரிகளி டம் கேட்க வேண்டும் என மழுப்பலான கூறி னர்.  அந்தக் கூட்டத்தில் அமைச்சர் பி. மூர்த்தி பேசுகையில், இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உதா ரணமாக எனது கிழக்கு சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட சரந்தாங்கி வனத்துறை பகுதி யில் இதே போல வனத்துறைக்கு சொந்த மான சாலை என கூறி மக்கள் பயன் படுத்தும் சாலையை போட விடாமல் அதிகாரிகள் தடுப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த  வண்ணம் உள்ளன. பேரையூர் பகுதியிலும் இதே பிரச்சனை உள்ளது. . இந்தப் பிரச்ச னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார். மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் , இதற்கு அதிகாரிகள் தரப்பில் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று கேட்கும்போது அதிகாரிகளிடம் சரியான பதில் இல்லை.பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி.,பேசுகையில், இந்த சாலையை ஒன்று வனத்துறை தலையிட்டு சரி செய்து கொடுங்கள். அல்லது மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைத்து விடுங் கள். விரைவில் இதற்கு ஒரு முடிவு தெரி விக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் தற்போது சாலையில் மரா மத்து வேலை துவங்கப் போவதாக தெரி கிறது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியச் செயலா ளர் வி.பி.முருகன் கூறுகையில், இந்த சாலை யினை பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் தணிக்கை செய்ய அதிகாரிகள் வந்துள்ள னர். விரைவில் சாலையினை முறையாக செப்பனிட வேண்டும். ஆனால் பழைய சாலை இருந்த இடத்திலேயே முறையாக சாலையினை போடாமல் கடமைக்கு போடு வதை போல் தெரிகிறது. அதனை இந்த துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் எடுத்து கொண்டு செப்பனிட வேண்டுமென கேட்டு கொள்கிறோம். தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்து வோம் என்று தெரிவித்தார்.

திருப்பத்தூர் பறவைகள்  சரணாலயத்தில் கணக்கெடுப்பு 

சிவகங்கை, பிப்.13-  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வேட்டங்குடி பறவைகள் சரணால யத்தில், பறவைகள் வருகை குறித்தான கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. திருப்புத்துார் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுக்குடிப்பட்டிக் கண்மாயில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் நடைபெறும்.  இந்தாண்டு கொரோனா மூன்றாவது அலையால் கடலோர பறவைகள் கணக்கெடுப்பு மட்டும் நடைபெற்றது. தற்போது, நிலம், நீர் சார்ந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், கொள்ளுக்குடிப் பட்டிக் கண்மாயில் நாரை, கொக்கு, வாத்து இனங்களை சேர்ந்த 22 வகை யான பறவைகள் ‘வலசை போதல்’ ஆக வந்து இன விருத்திக்காக தங்குகின்றன. எனவே, பறவை ஆர்வலர்கள், மானா மதுரை, திருப்புத்துார் வனத்துறையினர், சமூக நலக் காடு வனத்துறை, மதுரை இறகுகள் நிறுவனம் ஆகியோர் பங்  கேற்று கணக்கெடுப்பு எடுத்து வரு கின்றனர்.  முன்னதாக இவர்களுக்கு அதற்கான  பயிற்சியும் அளிக்கப்பட்டது. மண்டல பாதுகாப்பு அலுவலர் தீபக் பில்கி, டி.எப்.ஓ.ராஜ்குமார், ஏ.டி.எப்.ஓ. மணி வண்ணன், வனஅலுவலர் மதிவாணன் உள்ளிட்ட வனத்துறையினர் பங்கேற்ற னர்.  கணக்கெடுப்பாளர்களின் புள்ளி விபரங்கள் இணைக்கப்பட்டு சரணா லயத்தில் உள்ள பறவைகள் எண் ணிக்கை, உள்ளூர் பறவைகள் எண்  ணிக்கை, இனம் வாரியான எண்ணிக்கை விபரம் தெரியவரும்.

வைகையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

தேனி, பிப்.13- வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 519 கன அடியாக உயர்த்தப் பட்டது. பருவமழை கை கொடுத்த நிலை யில் வைகை அணையில் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.அதனைத் தொடர்ந்து பாச னத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்த போதும் தொடர்ந்து  மழை பெய்த தால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அணையின் நீர்மட்டம் 69 அடியில் நீடித்து வந்தது. ஞாயிறு காலை நில வரப்படி நீர்மட்டம் 68.96 அடியாக குறைந் துள்ளது. சனிக்கிழமை வரை 219 கன அடி நீர் திறக்கப்பட்டது. ஞாயிறன்று காலை 519 கன அடியாக உயர்த்தப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.80 அடியாக உள்ளது. 70 கன அடி நீர் வருகிறது. 600 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.80 அடியாக உள்ளது. 18 கன அடி  நீர் வருகிறது. 75 கன அடி நீர் திறக்கப்படு கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.45 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

சிபிஎம் வேட்பாளர்  முத்து சுப்பிரமணியத்தை ஆதரித்து க.கனகராஜ் பிரச்சாரம்

திருநெல்வேலி, பிப்.13- நெல்லை மாநகராட்சி 55 வது வார்டில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்து சுப்ரமணியன்னை ஆத ரித்து பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கனக ராஜ் பேசினார். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், மாநில குழு உறுப்பினர் கேஜி. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.எஸ்.செண்பகம், பீர் முகம்மது ஷா, திமுக நிர்வாகிகள் அக்பர் செரீப், பன்னீர்செல்வம் ,இளங்கோ ,விடு தலை சிறுத்தை கட்சி ரவி,நடராஜன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட தலைவர் தமிழ ரசு, திராவிட தமிழர் கட்சி மாநில தலை வர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக் குமரன், மனித உரிமை மீட்பு களம் லெனின், மற்றும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் கு.பழனி, குழந்தைவேல், எஸ்.கே.செந்தில், துரை.நாராயணன், கந்தசாமி,சரவணபெருமாள், பழனி மாரியபன், காமராஜ்,ஜோதி, பிஎஸ்என்எல் செல்வராஜ் ,ராஜ கோபால்,வெங்கடாசலம் மூத்த தொழிற் சங்கத் தலைவர் ராஜமணி,முன்னாள் கவுன்சிலர் தியாகராஜன் ,ஜெயபால், மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் தியாக ராஜர் பகுதிக்கு சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

தேவதானப்பட்டி -மஞ்சளாறு பகுதியில்  150 ஏக்கர்  நீர்நிலை புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா?

தேனி, பிப்.13- பெரியகுளம் வட்டத்தில் அரசு நிலம் 182 ஏக்கர் முறைகேடாக பட்டா வழங்கி யது கண்டறியப்பட்டதை தொடர்ந்து  தேவ தானப்பட்டி, மஞ்சளாறு நீர்நிலை புறம் போக்குகளை பெரும் புள்ளிகளுக்கு முறை கேடாக பட்டா வழங்கியதாக தெரிகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பெரியகுளம்  தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன் பட்டியில் 109 ஏக்கர் 47 சென்ட நிலமும், தாமரைக்குளம் 60 ஏக்கர் மற்றும் கெங்கு வார்பட்டி 13 ஏக்கர் என 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் பெய ருக்கு பட்டா மாறுதல் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.  இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை யினர் பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சி யர்களாக பணிபுரிந்த ஆனந்தி, ஜெயப் பிரிதா, பெரியகுளம் வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்தினமாலா, மண்டல துணை வட்டாட்சியர்கள் சஞ்சீவ் காந்தி, மோகன்ராம், நில அளவையர்கள் பிச்சை மணி, சக்திவேல், நில அளவையர், உதவி யாளர்கள் அழகர், ராஜேஷ் கண்ணன், மற்றும் அரசு நிலத்திற்கு பட்டா மாறுதல் பெற்ற அதிமுக முன்னாள் பிரமுகர் அன்ன பிரகாஷ் உள்பட பலர் மீது  10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. முன்னாள் பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், நில அளவை யர் பிச்சமணி, பெரியகுளம் கோட்டாட்சி யர் அலுவலக உதவியாளர் அழகர் ஆகி யோரை தேனி சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த இரண்டாம் தேதி கைது செய்து சிறை யில் அடைத்தனர். அடுத்தடுத்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் கனிம வளம் கொள்ளை யடிக்கப்பட்டது குறித்து கனிம வளத்துறை அதிகாரிகள் உட்பட 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நீர்நிலை புறம்போக்குகளுக்கு பட்டா? இந்நிலையில் தேவதானப்பட்டி, மஞ்ச ளாறு பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் மஞ்ச ளாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஓடை, நீர் வரத்து பகுதிகளை தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பெரும் நிலச் சுவான்தார்களாக விளங்கி வரும் குடும் பத்தை சேர்ந்த நபர்களுக்கு வருவாய் துறை யினர் பட்டா வழங்கியுள்ளது தெரியவந் துள்ளது.  இது தொடர்பாக பெரியகுளம் சார் ஆட்சி யர் ரிஷப் தமிழக வருவாய்த்துறை நில  ஆணையருக்கு ரகசிய அறிக்கை அனுப்பி யுள்ளதாக தெரிகிறது.