திருநெல்வேலி, ஜூலை 1- ஒன்றிய அரசு ஆர் எஸ்.எஸ்.சங்கிகளை உருவாக்கும் அக்னிபாதை திட்டத்தை கைவிட கோரி யும், இந்திய இளைஞர்களு க்கு நிரந்தர வேலை வழங்கக் கோரியும், மனித உரிமை போ ராளிகள் மீது போடப் பட்டுள்ள பொய் வழக்கு களை திரும்பப் பெற வேண் டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தியும் இளை ஞர்கள் மாணவர்கள் கூட்ட மைப்பின் சார்பாக நெல்லை டவுண் வாகையடி முக்கில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக மாநில தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலி பர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம், அனைத் திந்திய மாணவர் பெரு மன்ற மாவட்ட செயலாளர் சுரேஷ், இளைஞர் பெரு மன்ற மாவட்ட செயலாளர் தங்கராஜ் மோசஸ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அருள்ராஜ் ,இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கலை யரசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில குழு உறுப்பினர் பாலன், அனைத்து இளைஞர் பெரு மன்ற மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் பாலன் பேச்சிராஜா ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.