மதுரை, அக்.6- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் தொழிலாளர் பாகுபாடு, பெரும் நிறுவ னங்களுக்கு ஆதரவாக செயல்படும் போக்கை கண்டித்து சிஐடியு மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ், புறநகர் மாவட்டத் தலைவர் செ. கண்ணன், மாநகர் மாவட்டப் பொருளாளர் ஜே.லூர்து ரூபி, மாநகர் மாவட்டச் செய லாளர் இரா.லெனின் மற்றும் மாவட்ட நிர்வாகி கள் உட்பட 200-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர்.