சிவகாசி, ஆக.22- சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணகி காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, கே.கே.நகர், ராணி அண்ணா காலனி, முருகன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக குடியிருப்போ ருக்கு பட்டா வழங்க வேண்டும். கே.கேநகர், பூவநாதபுரம் இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில ஒப்படைப்பு ஆணை வழங்கி 25 வருடங்கள் ஆகியும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யாமல் காலம் கடத்துவதை கைவிட்டு பட்டா வழங்க வேண்டும். காளையார் குறிச்சி விவசாயிகளுக்கு 21 அடி பாதை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டபடி கிராம கணக்கில் பதிவு செய்யக் கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, கே.முருகன், ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிர மணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினர். முடிவில் சமாதானப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அதில், கோட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும், அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 25 அன்று மாலை அனைத்து விபரங்களுடன் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.