districts

img

சந்திராயன்-3 வெற்றியில் “கம்பிளியம்பட்டி”

”  சாணார்பட்டி, ஆக.28-  சந்திராயன்-3 வெற்றியில் கம்பிளியம்பட்டி விஞ்ஞானியின் பங்களிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜி.காமேஷ் குரு. சந்திரயான்- 3 வெற்றிக்குக் கார ணமான விஞ்ஞானிகளில் ஒரு வர். ஜி.காமேஷ் குரு கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்  பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தவர். பின்னர் திருச்சி ராப்பள்ளி அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறு வனத்தில் 2005-2008-ஆம் ஆண்டுகளில் மெக்கானிக்கல் பொறியியல் டிப்ளமோ பட்டதாரியானார். என்.ஐ.டி-.டி., யிலிருந்து எம்.எஸ். (நான்-டிஸ்ட்ரக்டிவ்  டெஸ்டிங்) படித்தவர். அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானி யாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். சந்திரயான்-3  பணியின் ஏவுகணை வாகனம், செயற்கைக்கோள் உந்து விசை அமைப்புகளில் பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். செயற்கைக்கோள் திரவ இன்ஜின் தரக்கட்டுப்பாட்டில் பொறியாளராக உள்ளார்.  சந்திரயான்-3 வெற்றியில் மட்டுமின்றி சந்திரயான்-2 மற்றும் ஆதித்யா செயற்கைக்கோள் திட்டங்களிலும் பணி புரிந்துள்ளார். காமேஷ் குருவை அவரது கிராம மக்கள்  மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.