மதுரை, பிப்.22- மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றிய தொகுப்பூதிய பணி யாளர்கள் 136 பேர் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் சங்கத் தின் சார்பாக மீண்டும் பணி வழங்கக் கோரி செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்க தலைவர் மு. வீரபாண்டி தலைமை தாங்கினார் .செயலாளர் நாக ரோகிணி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியா ளர்கள் சங்க மாநில பொருளாளர் இரா. தமிழ் ஆதரித்துப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செய லாளர் க. நீதிராஜா நிறைவுரையாற்றினார். சங்க பொருளாளர் மு.செந்தில்குமார் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.