districts

img

அதிமுக படுதோல்வி அடையும்; பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது...

மதுரை, பிப். 17 -

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தையும், புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெற்றிபெறும்; இங்கு பாஜக-விற்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். 

மேலும், பாஜக-வோடு ஐந்தாண்டுகள் கூட்டணி வைத்து மக்கள் விரோத கொள்கைகள் நிறைவேறுவதற்கு துணைபோன அதிமுக-வையும் தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மக்களவையில் திறம்பட  செயல்பட்ட சிபிஎம் எம்.பி.க்கள்

மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பி னர் சு. வெங்கடேசனின் “ஐந்தாண்டுகள் 150 வெற்றிகள்” நூல் வெளியீட்டு விழா மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கே. பாலகிருஷ்ணன் உரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

17-ஆவது மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மொத்தம் மூன்று பேர் இடம்பெற்றார்கள். நாம் விரும்பாத (பாஜக) ஆட்சி நடைபெற்ற நிலையிலும், நாடு தழுவிய பிரச்சனைகளுக்காக இவர்கள் நாடா ளுமன்றத்தில் போராடி, வாதாடி கோரிக்கை களை வென்றெடுத்துள்ளனர் என்றால் அது மிகையல்ல. தமிழ்நாட்டிலிருந்து கோயம்புத் த்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜ னும், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும் திறம்பட பணியாற்றியுள்ளனர்.

ஐஐடி-களில் உறுதிசெய்யப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமை
மாநில உரிமைகள், இட ஒதுக்கீட்டிற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வலுவாகக் குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி இடஒதுக்கீட்டிற்கு எதிராக இராம் கோபால்ராவ் குழுவின் அறிக்கையை நிராக ரித்து ஐஐடிகளில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய கடிதம் எழுதியதன் விளைவாக இராம்கோபால் ராவ் குழு அறிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் இட ஒதுக்கீடு காலியிடங்களை நிரப்ப ஓராண்டு காலக்கெடுவோடு 2021 செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு செப் டம்பர் 4-ஆம் தேதிக்குள் சிறப்புப் பணி நியம னங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப் பட்டது. நிலுவையிலிருந்த நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மதுரை மக்களவை  உறுப்பினர் எழுதிய கடிதத்தின் பலனாக ஐஐடிகளில் நிகழவிருந்த இடஒதுக்கீடு ஆபத்து நீங்கியது.

அரசியலமைப்புக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தை அராஜக மன்றமாக பாஜக மாற்றியுள்ளது. அஞ்சல்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளதன் மூலம் யாருடைய கடிதத்தையும் ஒன்றிய அரசு பிரித்துப் படிக்கலாம். அதை நகலெடுத்து வைத்துக் கொள் ளலாம்  மற்றொன்று யாருடைய தொலைபேசி யையும் ஒட்டுக் கேட்கலாம். பதிவு செய்யலாம் என்பது இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதி ரான மோசமான சட்டங்களில் ஒன்று.

நாடாளுமன்றத்திற்குள் குதித்து வண்ணப் பொடிகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியதற்காக, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 146 நாடாளுமன்ற உறுப்பினர்களை மோடி அரசு இடைநீக்கம் செய்தது. ‘நாட்டைத் தான் காப்பாற்ற முடியவில்லை.. நாடாளுமன் றன்றத்தையாவது காப்பாற்றுங்கள்’ என எதிர்க் கட்சிகள் கேட்டதை பாஜக-வால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

சாதனைகள் என்று கூற  பாஜக-விடம் ஒன்றுமில்லை

நரேந்திர மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் என்று எதையும் பாஜகவால் வெளியில் சொல்ல முடியவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் இராமரின் உதவியை நாடுகிறது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பாஜக தான் அடுத்து வெற்றி பெறும் என்ற கருத்தை மக்கள் மத்தி யில் திணிக்க முயற்சிக்கிறது. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 2024 மக்கள வைத் தேர்தல்தான் நாடு சந்திக்கும் கடைசித் தேர்தலாக இருக்கும்.

‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை பாஜக ஏற்கெனவே எழுப்பியுள்ளது. இதன் மூலம் எந்த மாநில அரசும் இடையில் ஆட்சிப் பொறுப்பை இழந்தால், அந்த மாநிலத்தில் எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திற்கு தேர்தல் நடத்தப்படமாட்டாது. அந்தச் சூழலில் அங்கு குடி யரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அது ஜனநாயகத்தை அவமதிக்கும் செய லாகும். எனவேதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜக-வின் முழக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. 

தென்மாநில தோல்வியை  சரிக்கட்ட பாஜக சூழ்ச்சி

தொகுதி மறுவரையறை மூலம் நாடு முழு வதும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக் கையை 543-இல் இருந்து சுமார் 850-ஆக அதிகரிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. தமிழ கம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக காலுன்ற முடியாது என்பது தெரிந்துதான், வட இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை அதிகரிக்கவும், தென் மாநிலங்களுக்கு இடங்களைக் குறைக்க வும் முயற்சிக்கிறது. இது தமிழகத்தின் சுயாட்சி யை பறிக்கும் செயல். 

எனவேதான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரி வித்து, மக்கள் தொகை அடிப்படையில் இல்லா மல், தற்போதுள்ள இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

தேர்தல் பத்திர விவகாரத்தில் சிபிஎம் குறித்து அவதூறு
தேர்தல் பத்திரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் அமர்வு மகத்தான தீர்ப்பு அளித் துள்ளது. அது மட்டுமல்ல யார் யாரிடமிருந்து எந்த கட்சிகள் எவ்வளவு தொகையை பெற்றனர் என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணை யத்திடம் வழங்க வேண்டுமென உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பெற்றதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. தவறான செய்தி வெளியிட்டவர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை எடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயங்காது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ கத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமை யிலான அணி வெற்றி பெறும். புதுச்சேரியை யும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறு வோம். தமிழகத்தில் பாஜக-விற்கு டெபாசிட் கூட கிடைக்காது. ராமருக்கு கோவில் கட்டியதால், மக்கள் பாஜக-வுக்கு வாக்களிப்பார்கள் என்று கருத முடியாது. 

ராமர் கோவிலைக் காட்டி 
மக்களை ஏமாற்ற முடியாது

இந்தாண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில்உள்ளது. அதற்காக கேரளாவிலும் தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும் என்று அர்த்தம் இல்லை. ஒரு மனிதனின் ஆன்மீக உணர்வு வேறு, அவன் வாக்களிக்கும் விதம் வேறு. பாஜக-வின் இந்த அரசியலுக்கெல்லாம் மக்கள் ஏமாறமாட்டார்கள். அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட்கூட வாங்க முடியாது

பாஜக-வுடன் இணைந்து, கடந்த ஐந்தாண்டு களில் பாஜக-வின் அனைத்து நடவடிக்கைகளுக் கும் உறுதுணையாக இருந்த அதிமுகவையும் மக்கள் தோற்கடிப்பார்கள். பாஜகவுடனான கூட்ட ணியை முறித்துக் கொண்டதாக அதிமுக அறி வித்துள்ளது. ஆனால், பாஜகவின் அடிப்படை சித்தாந்தத்தில் இருந்து அதிமுக மாறிவிட்டதா என்பதுதான் கேள்வி. மக்களவைத் தேர்தலு க்குப் பிறகு அதிமுக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை சொல்ல முடியுமா? எனவே, பாஜக-வையும் அவர்களோடு ஐந்தாண்டுகள் கூட்டணி வைத்து மக்கள் விரோத கொள்கைகள் நிறை வேறுவதற்கு துணைபுரிந்த அதிமுகவும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசினார்.