districts

img

மின்மயானங்களில் இடைத்தரகர்களின் தலையீடுகளை தடுக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி, ஜன.9- மின் மயானங்களுக்கு இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு, இடைத்தரகர்கள் அதிகளவு கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உயிரிழந்த வர்கள் பொள்ளாச்சி - உடுமலை ரோட்டிலுள்ள ரோட்டரி மின் மயானத்தில் ரூ. 3 ஆயிரம் அளவில் உடல்களை எரியூட்டப் படுகிறது. ஆனால், கடந்த காலங்களில் நோய்த்தொற்றி னால் ஏற்படும் உயிரிழப்புகளின் உடல்களை எரியூட்டு வதற்கு இடைத்தரகர்கள் தலையீடு அதிகளவில் இருந்த தாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதில், ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இனி வரும் காலங்களில் உடல்களை எரியூட்டுவதற்கு அரசு நிர்ண யித்த கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. இடைத்தரகர்களின் தலையீடுகளை தடுக்கும் வித மாக நகராட்சி அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண் டும். பொதுமக்களின் புகார்களை பெறுவதற்கு புகார் பெட்டி வைக்க வேண்டும். புகார் தெரிவிக்க எண்களை  பதாகை மூலம் தெரியபடுத்த வேண்டும். இடைத்தரகர்க ளின் தலையீடுகள் தெரியவந்தால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.