இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் ஊராட்சி பகுதிகளில் 150 குடும்பங்களுக்கு மேலாக குருவிக்காரர்கள் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசித்து வரும் பள்ளி குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாமல் உயர் கல்வி பெறுவதில் சிரமம் உள்ளதாகவும், உடனே சாதி சான்றிதழ் வழங்க பரிந்துரைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.