திருவில்லிபுத்தூர்,ஜூலை 10- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ‘ஹேண்ட் பால்’ போட்டியில் மாநில அளவில் முதலிடத்தை வென்றனர். சென்னை, ஆவடியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை ஹேண்ட்பால் அகாடமி சார்பில் மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி அணிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர் கள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் திருவில்லிபுத்தூர் குரு ஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடத்தை வென்று, சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் எஸ். தங்கவேல், வருண், வேங்கட கிருஷ்ணன் ஆகியோரை பள்ளியின் செயலர் டி.ஏ.எஸ். கிருஷ்ணன், நிர் வாகக்குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் எஸ்.கண்ணன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.