சின்னாளப்பட்டி, ஆக.24- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை அடுத்த ஸ்ரீராமபுரம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட திருமலை ராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கே.புதுக் கோட்டை, சுள்ளெறும்பு பகுதி அரசு மேல்நிலைப் பள்ளி 11, 12-ம் வகுப்பு மாண வர்களுக்கு தமிழக அர சின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி தலைமை வகித்தார். ரெட்டி யார்சத்திரம் ஒன்றிய பெருந் தலைவர் பக.சிவகுருசாமி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, பேரூராட்சி மன்ற தலைவர் சகிலாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் நசாரூதீன் வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். தலைமையாசி ரியர் சந்திராதேவி நன்றி கூறி னார். அப்போது அமைச்சர் பேசுகையில், ‘‘தமிழக அர சின் கல்வித்தரம்தான் உலகி லேயே மிகச் சிறந்தது. அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவியரின் எண் ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு மடங்கு அதிகரித்துள்ளது. உலகமே வியந்து பாராட்டும் சந்திரயான் திட்டத்தை தலைமையேற்று செயல்படுத்தி சாதனை படைத்தது அரசு பள்ளி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தான். எனவே அரசு பள்ளி மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தை முழுமையாக கற்றால் உயர்ந்த நிலையை அடை யலாம்’’ எனப் பேசினார்.