districts

img

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பு நியாயமான இழப்பீடு கோரி ஆட்சியரிடம் மாயாண்டிபட்டி விவசாயிகள் மனு

மதுரை, மார்ச் 24- எரிவாயு குழாய் அமைக்க கைய கப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு நியா யமான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப் பட்ட மாயாண்டிபட்டி விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புத னன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.  இது தொடர்பாக மார்ச் 16 அன்று ஆட்சியரை சந்தித்து, எரிவாயு குழாய் பதிப்பதால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் ப.முருகன், கி.முருகேசன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுக் கொடுத்தனர். அப்போது ஆட்சியர் விவசாயிகளிடம் கூடுதல் நில மதிப்பு பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆவணங்கள், சான்றுகள் இருந்தால் கொண்டு வாருங்கள் பரிசீலிக்கலாம் என்று கூறினார்.  அதன் அடிப்படையிலேயே மீண்டும் புதனன்று விவசாயிகள் குழு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தது. அந்தக் குழுவில் ப.முருகன், கி.முரு கேசன், ஆர்.பாண்டியம்மாள், கி. நல்லம்மாள், சி.கிருஷ்ணன், உள் ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அவர் களது மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை கிழக்கு வட்டம், அயி லாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட விளை நிலங்கள், மாயாண்டிபட்டி கிராம விவசாயிகளுக்குச் சொந்தமான இரு போக நன்செய் நிலங்கள், சென்னை எண்ணூர் - தூத்துக்குடி இயற்கை எரி வாயு குழாய் பதிப்புக்காக கைய கப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கான இழப்பீடு வழங்குவதில் காட்டப்பட் டுள்ள பாரபட்சத்தைப் போக்கி, நியா யமான இழப்பீடு வழங்கிட வேண்டும்.  ஒரே சர்வே எண்ணுள்ள நிலங்க ளில் கூட, ஒரு வரப்புக்கு இடைவெளி யில் கூட பத்து மடங்கு வித்தியாசம் உள்ளது. அதாவது ஒரு செண்டுக்கு ரூ. 45 ஆயிரமும், மறுபுறத்தில் ரூ. 4 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையைப் போக்க தங்களிடம் முறை யிட்டபோது, கூடுதல் நிலமதிப்புள்ள ஆவணங்களைத் தருமாறு கேட்டீர் கள். கீழ்க்கண்ட சர்வே எண்களில் உள்ள நிலங்களின் விற்பனை மதிப் புக்குரிய ஆவணங்களை இத்துடன் இணைத்துள்ளோம். அதற்குரிய சர்வே எண்கள்: 8/1, 8/2, 16/2A4B, 67, 84/12.  இந்த நிலங்கள் தற்போது கைய கப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு 400 மீட்டர், 800 மீட்டர், 1600 மீட்டர் தூரத்திற்குள் உள்ளவைதான் என் பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.  அத்துடன் தற்போது கையகப் படுத்தப்பட்டுள்ள நிலங்கள் அமைந் துள்ள அயிலாங்குடி ஊராட்சி, மதுரை மாநகராட்சி எல்லையிலிருந்து 8 கிலோ மீட்டருக்கு உட்பட்டவைதான். தமிழக அரசின் அரசாணைப்படி, அவையும்- கிராம ஊராட்சிகளாக இருந்தாலும்- நகரத்தின் நிலமதிப்பீட்டை வழங்கிட பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இந்த திட்டத்தால் பாதிக்கப்பட் டுள்ள விவசாயிகள் பெரும்பாலும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களா கவே உள்ளனர். பட்டியல் சாதி விவ சாயிகளின் நிலங்களை கையகப் படுத்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்று RFCTLARR Act 2013- சட்டம் கூறுகிறது. தவிர்க்க இயலா மல் கையகப்படுத்தும்போது, வாழ்வா தாரத்தை இழக்கும் பட்டியல் சாதி விவசாயிகளின் நலனுக்காக கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருகிறோம். அத்துடன் குத்தகை விவசாயி களின் நிலங்களுக்கு, உரிய இழப் பீட்டுத் தொகையை நேரடியாக, அவர்களிடமே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத் திற்கு உதவிடும் வகையில் நட வடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த மனுவின் நகல்கள் பத்தி ரப்பதிவுத்துறை அமைச்சர் பெ. மூர்த்தி, மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.