சிவகங்கை, செப்.2- சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் பெருக்கெடுத்து செல்லும் வெள்ளப்பெருக்கால் 35-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நமது நிருபரிடம் கூறுகையில், வைகையில் கடந்த ஓராண்டில் ஆறு முறை தண்ணீர் திறக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.வைகை ஆற்றில் தண்ணீர் வருவதால் பெரிய கண்மாயான மடப்புரம் கண்மாய் நிரம்பியுள்ளது. மாரநாடு கண்மாய், பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் சென்று கொண்டிருக்கிறது .பிரமனூரில் 70 சத வீதமான அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள் ளது.திருப்புவனம், கொந்தகை உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பின. வைகை பாசன 74 கண்மாய்களில் பாதியளவு நிரம்பின. இதில் வெள்ளமன தண்ணீர் சென்றா லும் மானாமதுரை கண்மாய், கீழமேல் குடி கண்மாய், கிருங்காகோட்டை கண்மாய், கால்பிரவு கண்மாய் ஆகிய கண்மாய்க ளில் ஒரு சொட்டு கூட தண்ணீர் வராத நிலை உள்ளது என்று தெரிவித்தனர்.