திருவில்லிபுத்தூர், டிச.28- கிராம மக்களின் விவசாயம் ,வீடுகள், குடிநீர் மற்றும் மக்களின் உடல்நலத்தை பாதிக்கின்ற வகை யில், திருவில்லிபுத்தூர் வட்டம் அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் கல்குவாரி மற்றும் கிரசர் அமைக் கும் பணி அனுமதியை ரத்து செய்ய கோரி கல்குவாரி எதிர்ப்பு போராட் டக்குழு சார்பில் கிராம மக்கள் பங்கேற்ற மாபெரும் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. அச்சம்தவிர்த்தான் கிரா மத்தில் டிசம்பர் 28 புதனன்று நடை பெற்ற உண்ணாவிரதத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பா ளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளரு மான எஸ்.வி.சசிகுமார் தலைமை தாங்கினார். ஊர்ப்பெரியவர்கள் முத்து காமாட்சி, மனோகரன், ராஜா, குருநாதன், மகாராஜன், கருத்த பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் கே அர்ஜுனன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரு மலை, ஜோதிலட்சுமி, அச்சம் தவிர்த்தான் ஊராட்சி மன்ற தலை வர் கிருஷ்ணவேணி கனகராஜ், துணைத்தலைவர் விவேகானந் தன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி கண்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுப்பாண்டியன், சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.விஜயமுரு கன் நிறைவுரையாற்றினார். போராட்டத்தில் சிபிஎம் நகர செயலாளர் ஜெயக்குமார், சிபிஐ நகர செயலாளர் மூர்த்தி ,ஒன்றிய செயலாளர் பலவேசம் மற்றும் அச்சம் தவிர்த்தான் பகுதிகளை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், பெண்கள் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.