சிவகங்கை,மே 20- சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மானாமதுரை வைகை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதிக் கக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தி னர். வைகை ஆற்றிலிருந்து மானாமதுரை, சிவகங்கை, கடலாடி, மதுரை ,அருப்புக் கோட்டை ஆகிய பகுதிகளுக்கு குடிதண்ணீர் ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் எடுக்கப் படுகிறது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதிக்கக்கூடாது என்று ஆதிமூலம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மானா மதுரை ஒன்றிய செயலாளர் முத்துராம லிங்கம், கீழப்பசளை அர்ஜுனன், ஆகி யோர் வலியுறுத்திப் பேசினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இப்பிரச்ச னையில் விவசாயிகளை அழைத்துப் பேசுவ தாக தெரிவித்தார். மானாமதுரை பகுதிகளில் விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள் அழிக்கின்றன என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். கீழநெட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அய்யாச்சாமி பேசுகையில், சுப்பன் கால்வாய் திட்டத்தை ஆய்வு மேற் கொண்டு மேம்படுத்த வேண்டும். பொ துப்பணித்துறை அதிகாரிகள் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவ சாயிகள் தெரிவிக்கிற குறைகள் தொடர் பாக உரிய பதில் அளிப்பதில்லை என்றார். கால்வாய் திட்டம் குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டு இது தொடர்பான அறிக்கை யை அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார். சின்னக்கண்ணனூர் முத்துராமலிங்கம் பேசுகையில், சின்னக்கண்ணனூர் தொடக்க கூட்டுறவு சங்கத்தில் நகை பயிர் கடன் தள்ளு படி தொடர்பாக முழு விவரங்களும் தெரி விக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழு தொகையும் வழங்க வில்லை. இது தொடர்பாக பலமுறை பேசி விட்டோம் என்றார். இதுகுறித்து கூட்டுற வுத் துறை இணைப் பதிவாளர், துணைப் பதிவாளர் ஆகியோர் விசாரித்து உடனடி யாக அறிக்கை தரும்படி ஆட்சியர் உத்தர விட்டார்.
கால்வாயை மேம்படுத்த ரூ.28 கோடி
கீழமேல்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெல்லமுத்து பேசுகையில், வைகை ஆற்றில் வெள்ளமென தண்ணீர் சென்ற போதும் கீழ மேல்குடி கண்மாய்க்கு தண்ணீர் வராத நிலை உள்ளது. அதனால் இந்த கால்வாயை முறைப்படுத்தி ஒழுங்கு படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கால்வாயை மேம்படுத்த ரூ.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .விரைவில் பணிகள் துவங்கும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.