districts

img

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, மே 3- தூத்துக்குடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற போட்டியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். விழாவில் ஆட்சியர் பேசுகை யில், தூத்துக்குடி மாவட்ட டென்  னிஸ் பந்து கிரிக்கெட் சம்மேள னத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் மிக வும் ஆர்வத்துடன் பள்ளி, கல்லூரி களுக்கு சென்று விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கி வரு கின்றனர்.  தற்போது மாவட்ட அளவி லான போட்டி நடைபெற்று வரு கிறது. இனி வரும் காலங்களில் மாநில அளவிலான போட்டிகள் நடத்தினால் அதற்கு மாவட்ட நிர்  வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்  கப்படும் என கூறினார்.