சென்னை,மே 26- பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க வியாழக்கிழமை (மே 26) மாலை சென்னை வந்தார். டில்லியில் இருந்து தனி விமானம் மூலம்சென்னை வந்த அவர், விமான நிலை யத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நேப்பியார் பாலம் அருகில் உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு வந்திறங் கினார். பின்னர் அங்கிருந்து தொலைக் காட்சி நிலையம் வழியாக காரில் விழா நடை பெற்ற நேரு உள்ளரங்கம் சென்றார். அங்கு விழா முடிந்தவுடன் மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு வந்து ஹெலி காப்டரில் விமான நிலையத்திற்கு செல்வ தாக இருந்தது. ஆனால் அவர் திடீரென சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்றார். இதன் காரணமாக பாதுகாப்பு என்ற பெயரில் அண்ணாசாலையில் விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் உள்ள சிறிய கடைகள் அடைக்கப்பட்டன. டீ கடை களில் வழக்கமாக கூட்டம் இருக்கும் என்ப தால் அந்த கடைகள் முதலில் மூடப்பட்டன. பின்னர் மற்ற கடைகளையும் காவல் துறையினர் கட்டாயப்படுத்தி அடைத்தனர். பிரதமர் திடீரென தனது பாதையை மாற்றிக் கொண்டதால் சாலையில் கால்கடுக்க நிற்க வேண்டியதாயிற்று என்று காவலர்கள் தெரிவித்தனர். அவர்கள் மாலை 4மணிமுதல் பிரதமர் புறப்பட்டுச் சென்ற இரவு 8 மணி வரை நின்று கொண்டிருந்தனர். மேலும் விழா நடைபெற்ற நேரு உள்ளரங்கம் அமைந்துள்ள சாலையில் கடை களும் ஹோட்டல்களும் காலை முதலே அடைக்கப்பட்டன.அண்ணாசாலையிலும் தொலைக்காட்சி நிலையம் அருகிலும் பாஜகவினரால் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் நிற்கவைக்கப்பட்டு பிரதம ருக்கு வரவேற்பு அளித்தனர்.