சிவகங்கை ஆக.10- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பாதரக்குடி கிராமத்தில் போடப் படும் தேசிய நெடுஞ்சாலைக்காக விவசாயி களிடம் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மிக குறைவான இழப்பீடு தொகை வழங்கப் பட்டுள்ளதை கண்டித்தும் அனைவருக்கும் பாரபட்சமின்றி இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலா ளர் மோகன் தலைமை வகித்தார். அழ கப்பன், ராஜேந்திரன், ராமனாதன், ராமச்சந்திரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் பெரு மாள், மாநில துணைத் தலைவர் முத்து ராமு, மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட 200 பேர் பங்கேற்றனர். வீடுகள் கட்டி குடியிருந்து வருப வர்களுக்கு நியானமான இழப்பீடு வழங்க வேண்டும். பாதரக்குடியில் உள்ள இரண்டு கண்மாய்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த கண்மாய்க்கான விவசாய நிலங்கள் பொய்த்து போய்விடும் அபாயம் உள்ளது. பாதரக்குடி விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார பட்சமான முறையில் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. மக்களிடம் எந்த கருத்தும் கேட்க வில்லை.நிலம் கையகப்படுத்தும் 2013 சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித்தை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது அவர், 18பேர்களுக்கு ஆகஸ்ட் 14 அன்று விசாரணை போட்டுள்ளோம் என்றார் . பேச்சுவார்த்தையில் கிராம மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.