ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா குழு உறுப்பினர் பூமிநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். குருவேல், கலையரசன், கண்ணகி, தாலுகா செயலாளர் செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.