விருதுநகர், மே 28- தமிழக அரசு, சாதி ஆண வப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண் டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு வழங் கிய பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும். சாதி மறுப்பு திரு மணம் செய்தவர்களுக்கு சாதியற்றவர் என சான்று வழங்கி அரசு வேலை வழங்கி பாதுகாக்க வேண்டும். தனி யார் துறையில் இட ஒதுக் கீட்டை அமல்படுத்த வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோரிக்கை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பாவாலி சாலையில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டியன் தலைமையேற்றார். துவக்கி வைத்து மாநிலக்குழு உறுப் பினர் எம்.ஊர்காலன் பேசி னார். கோரிக்கைகளை விளக்கி ஆதித் தமிழர் கட்சியின் எம்.சுந்தர்ராஜன், தமிழ்ப்புலிகள் கட்சியின் வீரப்பெருமாள், ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ரிமை இயக்கத்தின் பழனிக் குமார், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் லிங்கசாமி, சக்திவேல், தலித் விடுதலை இயக்கத்தின் பீமாராவ், ஐந் தினை மக்கள் கட்சியின் தர்ம ராஜ், திராவிடர் கழகத்தின் நல்லதம்பி, புரட்சிகர இளை ஞர் முன்னணியின் முகிலன் ஆகியோர் விளக்கிப் பேசி னர். முடிவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம்.முத்துக் குமார் கண்டன உரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அம்பேத் கரிய பெரியாரிய அமைப்பு கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண் டில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்தலை வர் டி.முத்துச்சாமி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் டி.செல்லக்கண்ணு, மாவட்ட செயலாளர் எம்.ஆர்.முத்துச் சாமி, பொருளாளர் ஆர்.வனஜா, மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.ராணி, தமிழர் சமூக நீதிக்கழகத்தின் நிறுவனத் தலைவர் சுறா.தங்கபாண்டி யன், தமிழ்புலிகள் அமைப் பின் மாவட்டச்செயலாளர் மருதை திருவாணன், பகு ஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் மனோகரன் உள் ளிட்ட தலைவர்கள் பங் கேற்று பேசினர்.
மதுரை
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார் பில் மதுரை ஆட்சியர் அலு வலக அருகே வட்ட நிர்வாகி செ.முத்துராணி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாதர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சசி கலா, மாமன்ற உறுப்பினர் கள் குமரவேல், ஜென்னி யம்மாள், விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் இன் குலாப், விடுதலை வீரன், செல்வம் உட்பட ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.
தேனி
தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட செயலாளர் இ. தர்மர் தலைமை வகித்தார் .மாவட்டத் தலைவர் வீ. மோகன் முன்னிலை வகித் தார். மாநிலக்குழு உறுப்பி னர் சுரேஷ் துவக்கி வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செய லாளர் இரா.தமிழ்வாணன், தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி தலித் ராயன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச்செயலா ளர் பெ.சுரேஷ், சமூக நல்லி ணக்க பேரவை தலைவர் முக மது சபி, கிறிஸ்துவர் மக்கள் நல பேரவை தலைவர் சம் மட்டி நாகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் எம்.குருசாமி, சிஐடியு மாவட்டத் தலை வர் சி.முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எல்.ஆர்.சங்கர சுப்பு உள்ளிட்டோர் பேசினர். ஏராளமானோர் கலந்து கொண் டனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் அரண் மனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன் னணியின் மாவட்ட தலைவர் மரு வான் தமிழ் தலைமை வகித்தார். முன்னணி மாவட்டச் செயலாளர் என்.கலையரசன், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி ரஞ்சித், ஆர். ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்து ராமு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி, வாலி பர் சங்கம் தட்சிணாமூர்த்தி, விசிக மாவட்ட நிர்வாகி விடு தலை சேகரன் ஆகியோர் பேசினர்.