districts

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

மதுரை, செப்.20- மதுரையில் ஒரே நாளில் 15  பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட் டுள்ளது. டெங்கு பரவாமல் தடுக்க மதுரை மாநகராட்சி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநகர்  மாவட்டச் செயலாளர் மா.கணே சன், புறநகர் மாவட்டச் செயலாளர்  கே.ராஜேந்திரன் ஆகியோர் புத னன்று விடுத்துள்ள அறிக்கை:- மதுரையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள். நான்கு சிறு வர்கள் என மொத்தம் 15 பேர்  டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள னர். நோய் பரவாமல் தடுப்பதற்குப்  போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாநகராட்சி 100- வார்டு களைக் கொண்டது. 72 வார்டுகள்  நகர்ப் பகுதியிலும், 28 வார்டுகள் புறநகர்ப் பகுதியிலும் உள்ளது. நிர்வாக ரீதியாக ஐந்து மண்ட லங்களாகப் பிரிக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. மதுரை புறநகர் பகுதியில் உள்ள 34 வார்டுகளுக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை மற்றும் சாலை  உள்ளிட்ட அடிப்படைக் கட்ட மைப்புப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக மதுரை யில் பெய்து வரும் மழையால் நகர்- புறநகர்ப் பகுதிகளில் தேங்கும் மழை நீரால் டெங்கு பாதிப்பு ஏற் பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என  அறிகிறோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும்  100-க்கும் மேற்பட்டோர் டெங்கு வால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி  மருத்துவமனை- தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். தற்போது மதுரை மாந கராட்சிப் பகுதிகளில் குடிநீர்க் குழாய்ப் பதிப்பு. பாதாளச் சாக்க டைப் பதிப்பு மற்றும் சாலை சீர மைப்புப் பணிகள் நடைபெற்று வரு கிறது. சாலைகள்- தெருக்களில் தோண்டப்படும் குழிகள் முறை யாக மூடப்படாததால் மழைநீர்  தேங்கி கொசுக்கள் உற்பத்தியா கும் இடமாக மாறிவிடுகிறது.

அதேபோல், மதுரை நகரில்  பல்வேறு இடங்களில் குடிநீரில்  கழிவு நீர் கலந்து வருவதும், மழை போல் தேங்கும் குப்பைகளினால் தொற்றுநோய்கள் பரவி வரு கிறது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் முக்கியக் கால்வாய்களான சிந்தாமணி, கிருதுமால், பந்தல்குடி, அனுப் பானடி மற்றும் பனையூர் உள்ளிட்ட  பிரதானக் கால்வாய்கள் தூர்வாரப்  படாமல் உள்ளது. இக்கால்வாய் களில் கழிவு நீர் தேங்கி நிற்பதால்  கொசுக்கள் உற்பத்தியாகும் இட மாக மாறிவருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் வாய்க்காலை ஆக்கிர மித்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வா கம், சுகாதாரத்துறை மதுரையில் பரவி வரும் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களைத் தடுப்ப தற்குப் போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை நகரில் உள்ள பிரதான கால்  வாய்களைத் தூர்வார வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள்  மூலம் டெங்கு பாதித்த பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுத்து, தேவையான மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்  கள் தினசரி வருவதை உறுதிப் படுத்த வேண்டும். 100 வார்டுகளிலும் மழை நீர்  தேங்கும் இடங்களைக் கண்டறி வது. குப்பைகளை அகற்றுவது. குடிநீரில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது. குண்டும்-குழியுமான சாலைகளைச் சீர்படுத்துவது, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்வது. கபசுர குடிநீர்.  நிலவேம்பு கசாயம் போன்றவற்றை  பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும்.