districts

img

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ஆண்டிப்பட்டி புறவழிச்சாலை அமைக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச்.18- போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினந்தோறும் அவ திப்பட்டு வரும் ஆண்டிபட்டி நகருக்கு, உடனடியாக புறவழிச் சாலை அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்திற்கு குறை வில்லாமல் நெருக்கடியாக இருக்கும். இந்த சாலை ஆண்டி பட்டி நகரில் இருப்பதால் அடிக் கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் பெரி தும் அவதிப்பட்டு வருகின்ற னர். முகூர்த்த தினம், முக்கிய  வழிபாட்டு நாட்களில் ஆண்டி பட்டி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஆண்டி பட்டியில் புறவழிச்சாலை அமைக்க ஒன்றிய, மாநில அரசு கள் அக்கறை காட்டவில்லை. போக்குவரத்து நெருக்க டியை குறைக்க, புறவழிச் சாலை திட்டத்தை உடனே செயல்படுத்தக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றிய செய லாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ஆகி யோர் புறவழிச்சாலையின் அவசியம் குறித்து பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.தயாளன், மா.தங்கராஜ் மற்றும் ஒன்றியக் குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.