ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 19- தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பணி நியமனம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக தொழிலாளர் கள் சங்கம் (சிஐடியு) சார் பில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்தி ராயிருப்பு கிளைகளில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கிளைத்தலை வர் தென்னரசு தலைமை தாங்கினார். போக்குவரத்து கழக சம்மேளன நிர்வாகி முனீஸ்வரன், கிளைச் செய லாளர் ராஜா ஆகியோர் விளக்கி பேசினர். தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் திருமலை, தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி மரியடேவிட், சிஐடியு மாவட் டக் குழு உறுப்பினர் வீர சதானந்தம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வத்திராயிருப்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் லோக நாதன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி கிளைச் செயலாளர் பெரிய சாமி பேசினார். கிளை துணைச் செயலாளர் முரு கன், பொருளாளர் லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் சார் பில் சுப்பிரமணி ஆர்ப்பாட் டத்தை வாழ்த்தி பேசினார்.