திண்டுக்கல், ஜுலை 27- பாளையம் அருகேயுள்ள கோவில்பட்டியில் தோழர் எம்.கணேசன் காலமானார். கடந்த 6 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதனன்று காலை இறந்தார். பின்னர் அவருக்கு வயது 60. கோவில்பட்டியில் பின்னர் அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டி ருந்தது. 1978 முதல் கடந்த 40 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராக இருந்து செயல்பட்டவர் தோழர் கணே சன். குஜிலியம்பாறை, பாளையம் பகுதி கிராமங்களில் கட்சியின் அமைப்புகளை கட்டுவதில் பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டவர். உள்ளுரில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், டி.முத்துச்சாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.ஆர்.முத்துச்சாமி, ஒன்றியச்செயலாளர் ஏ.ராஜ ரத்தினம் ஒன்றியக்குழு உறுப்பினரக்ள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். (ந.நி.)