ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரசார் புகார் அளித்துள்ள னர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. கடந்த அக்., 16 அன்று ராஜ்நந்த் கோனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷா, வாக்குகளை பெறுவ தற்காக காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அரசு புவனேஷ்வர் சாகு என்ப வரை கும்பல் கொலை செய்ததாக சர்ச் சைக்குரிய வகையில் குற்றம்சாட்டினார். இந்நிலையில் இந்த ஆதாரமற்ற குற்றச் சாட்டுத் தொடர்பாக அமித் ஷா மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என காங்கி ரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித் ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித் துள்ளது.