திண்டுக்கல், ஜூலை 9- ஸ்டேன்ஸ் பாதிரியார் முதலா மாண்டு நினைவு தினம் திண்டுக்கல்லில் அனுஷ்டிக்கப்பட்டது. பாதிரியார் ஸ்டேன்ஸ் லூர்து சாமி அரியலூர் மாவட்டம் விரகனூரைச் சேர்ந்தவர். ஜார்கண்ட், உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்காக சேவையாற்றி யவர். மோடி அரசு கடந்த 2018ம் ஆண்டு பீமாகொரேகான் வன்முறை தொடர் பாக தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. பார்க்கின்ஸ் எனப்படுகிற நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு சிறையில் பெரும் துன்பத்திற்கு ஆளா னார். உறிஞ்சு குழல் உள்ள கோப்பை வழங்க மறுத்து ஒன்றிய பாஜக அரசு சித்ரவதைகள் செய்ததன் மூலம் அவர் சிறையில் கடந்த ஆண்டு இறந்தார். உலக நாடுகள் முழுவதும் இருந்து ஒன்றிய பாஜக அரசுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அவரது உடல் நாடு முழுவதும் எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது முதலா மாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளி யில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண் டுக்கல் மறைமாவட்ட ஆயர் டாக்டர் தாமஸ் பாலசாமி உரையாற்றினார். தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை யின் சார்பாக மாவட்ட அமைப்பாளர் கே.எஸ்.கணேசன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஆஸாத் ஆகி யோர் கலந்து கொண்டனர். (ந.நி.)