districts

காசநோய் இல்லா மாவட்டமாக மாற்ற ஆட்சியர் வேண்டுகோள்

தூத்துக்குடி, மார்ச் 25 தூத்துக்குடியை காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 624 பேருக்கு காசநோய்க் கான சளிப் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. அவர்களில் 2 ஆயிரத்து 68 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது. அதில் 87 சதவீதம் பேர் பூரணகுணம் பெற்று உள்ளனர். பொதுமக்கள் தொடர் இருமல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி காச நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தும்மும் போதும், இருமும் போதும் வாயைத் துணியால் மூடிக் கொள்ள வேண்டும். சாலை மற்றும் பொது இடங்களில் எச்சில்துப்பக் கூடாது. காசநோய்  பற்றிய விழிப்புணர்வை அருகில் உள்ளவர்களுக்கும் ஏற்படுத்திட வேண்டும். மேலும் தொடர்ச்சியான இருமல், காய்ச்சல்,பசியின்மை, உடல் எடை குறைந்து வருதல், சளியில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி காசநோய் பரி சோதனைகள் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.