districts

img

நிறைவு பிரச்சாரம் : மதுரை, திண்டுக்கல்லில் எழுச்சிக் கோலம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் புதனன்று தனது பிரச்சாரத்தை பேரெழுச்சியுடன் நிறைவு செய்தார். மதுரையின் பல்வேறு வார்டுகளில் நிறைவு பிரச்சார ஊர்வலங்கள் புறப்பட்டு மாலையில் ஜெய்ஹிந்துபுரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் சங்கமமாக நிறைவு பெற்றது. பிரம்மாண்டமாக வானில் தொங்க விடப்பட்டிருந்த அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னம், அங்கு கூடியிருந்த அத்தனை பேரையும் உணர்ச்சிவயப்படுத்தியது; எழுச்சிக் கொள்ளச் செய்தது. நிறைவு பிரச்சாரத்தில் வேட்பாளர் சு.வெங்கடேசனுடன் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ம.கணேசன், துணை மேயர் தி.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் தனது நிறைவு பிரச்சாரத்தை புதனன்று காலை  பழனியில் துவங்கி, பல்வேறு பகுதிகளின் வழியாக மக்கள்  வெள்ளத்தில் மிதந்தவாறு சின்னாளப்பட்டியில் நிறைவு செய்தார். வழி நெடுகிலும் பெரும் எண்ணிக்கையில்  மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;