நகர் சுகாதார செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு
மதுரை, அக்.1- தமிழ்நாடு நகர சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் மதுரையில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், நகர் சுகாதார செவிலியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பகுதி சுகாதாரச் செவிலி யர்கள், பகுதி சுகாதார செவிலியர்களுக்கு சமுதாய சுகா தார செவிலியர்கள் என பதவி உயர்வு வழங்க வேண் டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு வெளியிடப்படும் அரசாணைகள் நகர் சுகாதார செவிலியர்களுக்கும் பொருந்தும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.5-ஆம் தேதி தற்செயல்விடுப்புப் போராட்டம். அக்.17-ஆம் தேதி மண்டல அளவிலான உண்ணாவிரதம், நவ.19-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய் யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத் தலைவர், எம்.பஞ்சவர்ணம், சேலம் மாநகராட்சி தலைவர் ஏ.சாந்தி, திருச்சிராப்பள்ளி மாநக ராட்சி தலைவர் கே. கார்த்ததிகை வள்ளி, என். வெங்க டேஷ்வரி, தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலு வலர் சங்கத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மந்திகுளத்தில் அணுகுசாலை அமைக்க அதிகாரிகளை அறிவுறுத்திய அமைச்சர்
மதுரை, அக்.1- மதுரை மாவட்டம் மந்திகுளம் கிராமப் பகுதியில் அணுகு சாலை அமைப்பது குறித்து அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:- தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் மதுரை-வாடிப்பட்டி இடையே நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், மேற்கு ஊராட்சி ஒன்றியம், மந்திகுளம் கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளால் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று வருவதற்கும், கால் நடைகளை கொண்டு செல்வதற்கும் சிரமம் ஏற்படுவ தாகத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அமைச்சர் மூர்த்தி சம்மந்தப்பட்ட பகுதியை ஞாயிறன்று ஆய்வு செய்தார். அப்போது, “ மக்கள் சிரமப்படாத வகையிலும், நான்கு வழிச்சாலை பணிகள் பாதிக்கப்படாத வகையிலும் அணுகு சாலை அமைக்க வேண்டுமென தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். அணுகு சாலை அமைப் பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற் கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா, உட்பட தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
அரசுப் பேருந்தின் டயர் கழன்று ஓடியது
மதுரை, அக்.1- பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தின் டயர் கழன்று ஓடியது. அதிர்ஷ்ட வசமாக ஓட்டுநர், நடத்துர், பயணி கள் உயிர்தப்பினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து பயணி களை ஏற்றிச்சென்ற அரசுப் நகர்ப் பேருந்தின் முன்பகுதியில் ஓட்டுநர் இருக்கைக்கு கீழிருந்த டயர் கழன்று தனியாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்தப் பேருந்து காலை பல்வேறு வழித்தடங்களில் இயங்கிவிட்டு உசிலம்பட்டியிலிருந்து பேரையூர் நோக்கிச் சென்றுள்ளது. நல்லுத் தேவன்பட்டி கண்மாய் கரையில் சென்றபோது பேருந்தின் டயர் கழன்று ஓடியுள்ளது. ஓட்டுநரின் சமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் உயிர் தப்பினர். இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில், உதிரிபாகங்கள் இல்லை. பழைய உதிரிபாகங்களை ரீ-கண்டீசன் செய்து தருகிறார்கள். பராமரிப்பு என்பது அறவே இல்லை. விபத்திற்கு இதுவே பிரதான காரணம். ஓட்டு நரின் சமார்த்தியத்தால் பயணிகள் காப்பாற்றப்பட்டனர். தரமான உதிரி பாகங்களை வழங்கி மக்களின் பாது காப்பான பயணத்தை உறுதிப்ப டுத்த வேண்டியது கழக நிர்வாகம தான் என்றனர்.
அலங்காநல்லூரை அடுத்துள்ள தெத்தூரில் சிறைச்சாலை விவசாயிகளின் அச்சத்தைப் போக்குவதே முதல் பணியாகட்டும்
அலங்காநல்லூர், அக்.1- மதுரை இடையபட்டியில் அமைய விருந்த மதுரை சிறைச்சாலை மதுரையிலி ருந்து சுமார் 30 கி.மீ., தொலைவிலுள்ள பாலமேட்டை அடுத்துள்ள தெத்தூரில் அமைய உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த நிலையில் சிறுமலை அடி வாரத்திலுள்ள தெத்தூர், மற்றும் மேட்டுப் பட்டி கிராம விவசாயிகள் தங்களது விளை நிலம் என்னவாகும்...? தங்களது எதிர் காலம் என்னவாகும்...? இதுகுறித்து, தெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஷயமறிந்த ஒருவர் கூறியதாவது: தெத்தூர் பகுதி சிறுமலை அடி வாரத்தில் அமைந்துள்ளது. இது வருவாய் கிராமம் என பட்டியலிடப்பட்டுள்ளது. இந் தக் கிராமத்தில் டி.நாராயணபுரம், டி. கெங்கமுத்தூர், டி.கொழிஞ்சிபட்டி, டி. ஆதி திராவிடர் காலனி, டி.சிறுதோப்பூர் ஆகிய கிராமங்கள் உள்ளடங்கியுள்ளது. கலைஞர் ஆட்சியில் இப்பகுதியிலி ருந்த சுமார் 1,200 ஏக்கர் நிலங்கள் ஏழை மக்க ளுக்கு வகைப்படுத்தி வழங்கப்பட்டது. 800 ஏக்கருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 400 ஏக்கருக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இப்பகுதியில் மா, கொய்யா, தென்னை விவசாயம் தான் பிரதானம். கத்திரி, பீன்ஸ், காலிபிளவர் உட்பட அனைத்துக் காய்கறிகளும் ஊடுபயிராக விளைவிக்கப்படுகிறது. சுமார் 50-ஆண்டு களுக்கும் மேலாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். சிறுமலை அடிவாரம் என்பதால் யானை, புலி தவிர காட்டெ ருமை, கேழைஆடுகள், மான் போன்ற வன விலங்குகள் உள்ளன. முன்பெல் லாம் விவசாயிகள் ஊருக்குள் தான் வசித்து வந்தார்கள். இப்போது விளைநிலங்கள் உள்ள பகுதியிலேயே வீடுகள் கட்டி தங்கி யிருக்கின்றனர். எங்கள் கிராமத்தில் குறைந்தது 60 பேர் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். தவிர ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு பால்மாடுகள் வளர்க்கப்படுகின்றன. “சிறைச்சாலை அமையவிருக்கிறது” என்ற செய்தியை எங்கள் கிராம மக்கள் பத்திரிகைகள் மூலமாகத்தான் அறிந்து கொண்டுள்ளனர். தெத்தூர் பகுதியில் சிறைச்சாலை அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும். எங்களது வாழ்வாதாரம் பறிபோகும் என்ற அச்சம் உள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக்கூட்டத்தில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அடுத்த நடவ டிக்கை குறித்து முடிவு செய்வோம். சுற்றுச்சூழலை மட்டுமல்ல, வனப்பகு தியையும் நாங்கள் பாதுகாத்து வருகி றோம். தமிழக அரசு இப்பகுதியை முழுமை யாக ஆய்வு செய்ய வேண்டும். விளை நிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேட்டுப்பட்டி பகுதி விவசாயி ஒருவரி டம் பேசியபோது, “தெத்தூர் விவசாயிகள் கூறுவது அப்படியே மேட்டுப்பட்டிக்கும் பொருந்தும்” விளைநிலங்களையும், விவ சாயத்தையும் பாதுகாக்க வேண்டும். எங் களை தமிழக அரசு நிச்சயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றார்.