சிவகங்கை ஆட்சியரகம் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, ஜூன் 19- அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில தலைவரை பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்ட வட்டார அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வீரய்யா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேதுராமன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் உமாநாத், மாவட் டச் செயலாளர் கருணாநிதி மற்றும் பலர் பேசினர்.
நாய் துரத்தி வந்த மானை பிடித்து சமைத்த ஐந்து பேர் கைது
இராஜபாளையம், ஜூன் 19- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார் புரத்தைச் சார்ந்த கிருஷ்ணசாமி (45), குருசாமி (36) உள்பட ஐந்து பேர் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன் கோவில் அருகே பூவாணி விலக்கில் துப்பாக்கி சுடும் பகுதி அருகே சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்காக வேலைக்கு சென்று உள்ளனர். அப்பகுதியில் ஒரு புள்ளி மானை வேட்டை நாய்கள் துரத்தி வந்தன. உடனடியாக 5 பேரும் நாய்களை விரட்டி மானை பிடித்து கணபதி சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் சமையல் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய துணை இயக்குனர் தேவராஜ் கொடுத்த தகவ லின் பேரில், வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலை மையில் வனவர்கள் செல்வராஜ், கனகராஜ், விக்னேஷ் ஆகியோர் அங்கு சமைத்துக் கொண்டிருந்த மான் மாமிசத்தை பறிமுதல் செய்தனர். ஐந்து பேரையும் கைது செய்து இராஜபாளையம் வனச்சரக அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஐந்து பேருக்கும் இது முதல் குற்றம் என்பதால் தலா ரூ.15,000 அபராதம் விதித்த னர்.
புனல்வேலி கிராமத்தில் நிற்காத பேருந்தால் மாணவர்கள் அவதி
இராஜபாளையம், ஜூன் 19- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்பகுதி யில் புனல்வேலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து ஏராளமானோர் தளவாய்புரம் பகுதியிலும், சேத்தூர் பகுதியிலும் இராஜபாளையத்திலும் அரசு பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். இவர்கள் காலையில் 8 மணி முதல் 8.45 வரை புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் காத்து நிற்பது வழக்கம். அரசு பேருந்து மீனாட்சிபுரம் மாங்குடி பகுதியில் இருந்து விரைந்து வந்து புனல்வேலியில் நிற்காமல் சென்று விடுகிறது. இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர் ஓடிச்சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தனியார் பேருந்தில் கட்டணம் செலுத்தி பள்ளிகளுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் பேருந்து பணிமனை மேலாளர்கள், மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலு வலர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டு புனல்வேலி கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்ல அறிவுறுத்தும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவிற்கு கஞ்சா கடத்திய 2 பேர் கைது
கம்பம், ஜூன் 19- கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த உள்ள தாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தி பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமை யில் போலீசார் கோம்பை ரோடு சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள நாககன்னியம்மன் கோவில் பகுதியில் சந்தே கப்படும்படியாக சாக்குப்பையுடன் பெண் உட்பட 2 பேர் நின்றிருந்தனர். அப்போது 2 பேரையும் பிடித்த போலீ சார் அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை யிட்டனர். அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கம்பம் கோசந்திர ஓடையைச் சேர்ந்த செல்வம் (45), உலகத் தேவர் தெருவைச் சேர்ந்த சாந்தி (40) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கம்பத்திற்கு கொண்டு வந்து பின்னர் கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம், சாந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிரசர் மணலுக்கு பதிலாக குப்பைகளை பரப்பி பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் அவலம்
மதுரை, ஜூன் 19- மதுரை மாநகராட்சி 64வது வார்டு, பெத்தானியாபுரம் மேட்டு தெரு, அகஸ்தியர் வீதி – 1வது தெருவில், சாலை மேம்பாட்டு பணிகளில் பெரும் சீர்கேடு நிகழ்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் இவ்வழியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு, முறையாக கிரசர் மணல் போடப்பட்டு சாலை அமைக் கப்பட்டது. தற்போது அதே பகுதியில் மீண்டும் சாலை மேடாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை மாநக ராட்சி ஒப்பந்ததாரர், கிரசர் மணலுக்கு பதிலாக வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பை கழிவுகளை கொட்டி அதன் மீது கற்கள் பதிக்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதில் பிளாஸ்டிக் கழிவுகள், பழைய துணிகள், சிதைந்த பொருட்கள் என பல்வேறு அபாயகரமான மற்றும் அருவருப்பான பொருட்கள் உள்ளன. இதனால், மழை பெய்யும் காலத்தில் இது போன்ற குப்பைகளால், சாலைகள் பள்ளமாகும், மேலும், சாலையின் உயரம் அதிகரிக்கப்படுவதால், அருகில் உள்ள வீடுகள் பள்ளமாகி, வீட்டில் உள்ள வெளிப்புற கேட்டுகள் மூடுவதற்கு சிரமம் ஏற்படுகிறது, மழை நீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே மழைநீர் வடிகால் அமைக்கப்படாத நிலையில் சாலையில் நீர் தேங்கும் அவல நிலை ஏற்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மாவரைக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
விருதுநகர், ஜூன் 19- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் உலர் மற்றும் ஈர மாவு அரைக் கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியது: சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவ னால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் பொரு ளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டம் உள்ளது. ரூ.10ஆயிரம் அல்லது அதற்கு மேற் பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்தி ரங்கள் வாங்கும் பொழுது, மொத்த விலை யில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5ஆயிரம் மானிய தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று), 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும் ( பிறந்த தேதிக்கான சான்று), திட்டத்தில் முன்னு ரிமை பெற கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப் பட்ட பெண்கள் என்பதற்கான சான்று, ஆண்டு வருமான வரம்பு (ரூ1.20 லட்சத்திற்கு மிகாமல்) வேண்டும். பயன்பெற விரும்புவோர், விண் ணப்பங்களை வரும் ஜூன் 23 முதல் ஜூலை 14க்குள் புதிய மாவட்ட ஆட்சியரகம், 3வது தளத்தில் உள்ள சமூகநல அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள் ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
திருநங்கையருக்கான சிறப்பு முகாம் தேனியில் 24 ஆம் தேதி நடக்கிறது
தேனி, ஜூன் 19- தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் படி திருநங்கைகளுக்கு நலவாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய சேவைகளை இம்முகாம் மூலம், வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இம்முகாம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் ஜூன் 24 ஆம் தேதி காலை 9.30 மணியள வில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கையர் மற்றும் திருநம்பிகள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.
டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வுகள் தேனி ஆட்சியர் அறிவிப்பு
தேனி, ஜூன் 19- டிஎன்பிஎஸ்சி தொகுதி IV தேர்விற்கான மாதிரி தேர்வு கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய வளாகத்தில் ஜூன் 21, 28, ஜூலை 5 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு அட்டவணையின்படி தொகுதி IV- இல் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய காலியிடங்களுக்கான தேர்வு 13.7.2025 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி. எஸ்.ஸி குரூப் IV தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் ஜூன் 21, 28, ஜூலை 5 ஆகிய தேதிகளில் டி.என்.பி.எஸ்.சி தரத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வை எழுத வருகை தரும் விண்ணப்ப தாரர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் விண் ணப்ப நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இம்முழு மாதிரி தேர்வில் பங்குபெற விருப்பும் விண்ணப்ப தாரர்கள் தங்களின் பெயரை 6379268661, என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
உயர் கல்வியில் சேர்வதற்கு மாணவர்க்கு சிறப்பு குறைதீர் கூட்டம்
தேனி, ஜூன் 19- தேனி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர் கள் உயர் கல்வியில் சேர்வதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர், உயர்கல்வி படிப்புகள், கல்லூரிகள் தொடர்பாகவும் கல்வி உதவித்தொகை, கல்விக்கடன்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படுவோர் திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) 82200 77114 மற்றும் 78717 42115 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்று பயன டையலாம். இக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் இந்தி ராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பணி நியமனத்தில் பங்கு கேட்டு பள்ளியை சேதப்படுத்திய நிர்வாகிகள்
தேனி, ஜூன் 19- போடி அருகே திருச்செந்தூரில் அரசு உதவி பெறும் அமராவதி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. பள்ளியின் முகமை தலைவர் பரத், பள்ளிக்குழு உறுப்பினர் ஜாபர் ஆகியோர் தலைமை ஆசிரியரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதை தொடர்ந்து பள்ளி செயலா ளர் அமரன், தர்மராஜ் இருவரையும் அழைத்து பேசி எடுத்து சென்ற வருகை பதிவேட்டை திரும்ப பெற்றுள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியர் பணி நியமனத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி செயலாளர் அமரன், தர்மராஜ் அவரது மனைவியை கொலைமிரட்டல் விடுத்தது, பள்ளி கேட்டில் பூட்டை உடைத்து மின் விசிறி உள்ளிட்ட பொருட் களை சேதப்படுத்தியதாக பள்ளியின் செயலாளர் அமரன், தர்மராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் பள்ளியின் முகமை தலைவர் பரத், பள்ளி குழு உறுப்பினர் ஜாபர் ஆகி யோர் மீது பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலை வாங்கித் தருவதாக ரூ.8.50 லட்சம் மோசடி
தேனி, ஜூன் 19- ஆண்டிபட்டி வைகைபுதூர் கே.கே.காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் (36) இவரை கடந்த 2018ம் ஆண்டு ஆண்டிபட்டி சீனிவாசா நகரைச் சேர்ந்த நாகலட்சுமி, செந்தில், முருகன், ஏமா, ரம்யா ஆகிய 5 பேர் அறிமுகமாகியுள்ளனர். அப்போது தினேஷ் அரசு வேலை தேடி அலைவதை கண்டனர். அப்போது மதுரை முனிசிபாலிட்டி அலுவல கத்தில் பில் கலெக்டர் வேலைவாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து ஆசை வார்த்தை கூறி 5 லட்சம் பணம் பெற்றனர். பின்னர் 2022ம் ஆண்டு பில் கலெக்டர் வேலை கிடைப்பதில் கால தாமதம் ஆவதால், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பெற்றனர். ஆனால் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து நாகலட்சுமி உட்பட 5 பேரிடம் தான் கொடுத்த 8 லட்சத்து 50 ஆயிரத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது 5 பேரும் தினேஷை பார்த்து பணத்தை திருப்பி தர முடியாது என்றும் சாதியை சொல்லி திட்டி உள்ளனர். இதுகுறித்து தினேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் ஆண்டிபட்டி சீனி வாசா நகரைச் சேர்ந்த நாகலட்சுமி, செந்தில், முருகன், ஏமா, ரம்யா ஆகிய 5 பேர் மீது பண மோசடி, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தேனியில் பெருந்திரள் முறையீடு
தேனி, ஜூன் 19- மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறை பாடுகளை களைந்து முழு மையாக செயல்படுத்த கோரி தேனி ஆட்சியர் அலு வலகம் முன்பு செவ் வாய்க்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத் தலை வர் சு.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் க.முத்துகுமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட தலை வர் ச.தாஜுதீன், மாவட்டத் துணைத் தலைவர்கள் க.லட்சுமி, பொ.அழகுராஜு, க.சக்திமுருகன், மாவட்ட இணை செயலாளர்கள் இரா.விஸ்வன், இரா.மலர்விழி, பா.சி.தமிழ்பர மன், ம.பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் க.துரை ராஜ், வருவாய் துறை அலு வலர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கருப்பணராஜா ஆகியோர் ஆதரித்து பேசினர். மாநிலச் செயலாளர் க.நீதிராஜா ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். மாவட்ட பொருளாளர் வெ.நாக ராஜன் நன்றி கூறினார். முடிவில் மாவட்ட கரு வூல அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
உத்தமபாளையம் அருகே மின் வேலியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு?
தேனி, ஜூன் 19- உத்தமபாளையம் அருகே மின் வேலியில் மின்சா ரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். உத்தமபாளையம் தாமஸ் காலனியில் வசித்து வருபவர் ஈஸ்வரன் - நித்யா தம்பதியினர். ஈஸ்வரன் மாடுகளை வளர்த்துக் கொண்டும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். புதன்கிழமை காலை புல் அறுப்பதற்காக கோம்பை சாலையில் உள்ள அனு மந்தம்பட்டியை சேர்ந்த சிவா என்பவர் தோட்டத் திற்கு சென்றுள்ளார். வெகு நேரமாக வீடு திரும்ப வில்லை. உறவினர் ஒருவர் அவரை தேடிச் சென்றுள் ளார். அப்போது அவர் இறந்த நிலையில் கிடந் துள்ளார். இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு உத்தமபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சிவாவின் தோட்டத்தில் பன்றிக் காக தோட்டத்திற்குள் தரையில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் கால் பட்டு இறந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.
வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
தேனி, ஜூன் 19- தேனி டி.பி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வே.ஆறுமுகம். இவரது மகன் நிஷோக் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து விட்ட நிலையில் மேற்படிப்பு படிக்க வேண்டாம். அரசு வேலை வாங்கி தருவதாக இவரிடம் தேனி ராஜா லயனை சேர்ந்த பொன்.சிவா என்ற சிவகுமார் அறிமுமாகி, ஆண்டிபட்டி யை சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ்வரன் என்பவர் மூலம் மூன்று தவணைகளில் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டும் வேலை வாங்கி தரவில்லை. 5.5.2025 ஆம் தேதிக்குள் வேலை வாங்கி தரு வதாக பத்திரத்தில் எழுதிக்கொடுத்தும் வேலை வாங்கி தரவில்லை என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். அதன் பேரில் தேனி காவல்நிலையத்தில் மகேஷ்வரன், பொன்.சிவா மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் .
கூடலூர் அருகே மனைவியைப் பிரிந்த ஆத்திரத்தில் மாமியாரை குத்திக் கொன்ற மருமகன்
தேனி, ஜூன் 19- கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண் டன்பட்டியைச் சேர்ந்த கொடியரசன், பூங்கொடி (55) தம்பதியரின் மகளான நதியா (38) என்பவருக்கும், காமயகவுண்டன்பட்டி யைச் சேர்ந்த சுருளி (45) என்பவருக்கும் 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து ஒரு மகனுடன் காமயகவுண்டன்பட்டியில் சுருளியின் தாய், தந்தையரோடு வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக சுருளிக்கும் நதியாவிற்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் நதியாவை யும் சுருளியின் தந்தையான பெரியகருப்ப னையும் சுருளி தாக்கியதாக காவல்நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டு அதற்காக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இதனிடையே சுருளி திரும்ப வரும்போது அதனால் பிரச்சனை ஏற்படும் என்பதால் நதியாவை குள்ளப்ப கவுண்டம்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சுருளியின் தாய், தந்தையர் அனுப்பி வைத்துள்ளனர். புதன்கிழமை மதியம் சுருளி குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள நதியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே நதியாவும்,அவரின் தந்தை கொடி யரசனும் தோட்ட வேலைக்கு சென்று விட்ட தால், மாமியார் பூங்கொடியுடன் சுருளி வாய் தகராறில் ஈடுபட்ட நிலையில், திடீரென்று தான் வைத்திருந்த கத்தியால் பூங்கொடி யின் கழுத்தில் குத்தியுள்ளார். பூங்கொடி யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத் தில் உள்ளவர்கள் வந்தவுடன் சுருளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கழுத்தில் குத்தப்பட்டு படுகாயத்துடன் இருந்த பூங்கொடியை கம்பம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அங்கு பூங்கொடி இறந்து விட்டார். இதுகுறித்து கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சுருளியை தேடி வருகின்றனர்.