districts

img

நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் கோரி சிஐடியு போராட்டம்

விருதுநகர், ஜூலை 25- தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் மாத  உதவித் தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு  முதல் கல்வி நிதி வழங்க வேண் டும். ஆன்-லைன் பதிவில் அடிக்கடி பழுதாகும் சர்வரை சீர் செய்ய வேண்டும். காலதாமதமின்றி பென்சன் தொகையை வழங்க வேண்டும்.பணப்பலன் கேட்டு விண்ணப்பித்த அனைத்து மனுக் களுக்கும் விரைந்து பணப்பலன் வழங்க வேண்டும். முறைசாராத் தொழிலாளர் நலவாரிய செயல்  பாட்டை சீர்படுத்த வேண்டும் என்  பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட தொழிலா ளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு உடலுழைப்பு தொழிலாளர் சங்க  மாவட்ட செயலாளர் ஆர்.பாலசுப்பி ரமணியன் தலைமையேற்றார். பல்வேறு சங்க நிர்வாகிகள் பி. ராமர், எம்.சாராள், ஆர்.சோமசுந்த ரம், எம்.சி.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட் டத்தை துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் எம்.மகாலட்மி பேசினார்.  முடிவில் சிஐடியு மாவட்ட செய லாளர் பி.என்.தேவா உரையாற்றி னார்.  இதில் ஏராளமானோர்பங்கேற் றனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்  பாக சிஐடியு மாவட்ட பொருளாளர்  ஆர்.முத்து விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிஐ டியு மாவட்ட தலைவர் எஸ் ஏ.  சந்தானம் துவக்கி வைத்து பேசி னார். சிஐடியு மாவட்ட செயலா ளர் எம்.சிவாஜி சிறப்புரையாற்றி னார். சிஐடியு நிர்வாகிகள் ஆர்.குரு வேல், சுடலைக்காசி, மணிக் கண்ணு, வாசுதேவன் ஆனந்த், ஞானசேகர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

மதுரை 

சிஐடியு மதுரை புறநகர் மாவட்  டக்குழு சார்பில் மதுரை மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவல கம் (எல்லீஸ்நகர்) முன்பு மாவட்ட பொருளாளர் ஜி. கௌரி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கட்டுமான தொழிலாளர் சங்க புற நகர் மாவட்டா- செயலாளர் சி. மணி கிருஷ்ணன் துவக்கவுரையாற்றி னார்.பல்வேறு சங்க நிர்வாகிகள் ஏ. பி. பாண்டி, பொன்.கிருஷ்ணன்,  பி.பொன்ராஜ். என்.காளிராஜன்,  எஸ். எம்.பாண்டி. எம்.சௌந்திர ராஜன் ஆகியோர் பேசினர். மாவட் டச் செயலாளர் கே.அரவிந்தன் நிறைவுரையாற்றினார். பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

திண்டுக்கல்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவல கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே. ஆர். கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் கே.பிரபாகரன், பொருளா ளர் தவக்குமார், பேராசிரியை சோ. மோகனா மற்றும் மாவட்ட நிர்வாகி கள் ஆகியோர் பேசினர். நூற்றுக் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.