திருநெல்வேலி, ஜன.22- நெல்லை, தென்காசி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர்கள் பாளையங்கோட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு வெள்ளி யன்று காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வண்ணமுத்து தொடங்கி வைத்து பேசினார். இதில், சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.முருகன், சங்க தலைவர் ஸ்டீபன், பொருளாளர் கண்ணன், செயலா ளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், குடிநீர் வடி கால் வாரிய தற்காலிக ஊழியர்க ளுக்கு ஒப்பந்தப்படி செட்டில் ஆப்ரேட் ஊதியம் வங்கி மூலம் வழங்க வேண்டும். ஈ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி உள்ளிட் டவை ஊழியர்களின் சம்பளத் திற்கு ஏற்ப பிடித்தம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்க ளை நிரப்ப வேண்டும். சேதம டைந்த அனைத்து மோட்டார் செட் களையும் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.