மதுரை, ஆக.9- கடந்த ஐந்து ஆண்டுகளாக சம்பளம் இன்றி அல்லல்படும் கூட்டு றவு வீட்டு வசதி சங்க ஊழியர் களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். ஊழியர் களுக்கு ஊதியம் வழங்குவதற் கான சிறப்பு நிதியை ஏற்படுத்த வேண்டும். 600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களில் நலிவுற்ற சங்க பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி புதன்கிழமையன்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐ டியு) சார்பில் மதுரையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சம்மேளன உறுப்பி னர் கே.போஸ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் எம்.பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து பேசினார், சம்மேளன உதவி தலைவர் எம்.துரைச்சாமி மற்றும் மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பலர் பங்கேற்றனர்.