கடமலைக்குண்டு, பிப்.24- இந்திய அரசு மதுரை மக்கள் தொடர்பு அலுவலகம், வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் மற்றும் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் மயிலாடும்பாறையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வேர்ல்டு விஷன் திட்ட மேலாளர் ஜெசுகரன் தங்கராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தர பாரதம் வரவேற்றார். தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செய லாளர் நீதியரசர் ராஜ்மோகன் முன்னிலை வகித்துப் பேசினார். பின்னர் விளையாட்டுப் போட்டிகள் நடத் தப்பட்டு, வெற்றி பெற்ற பள்ளி மாண வர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பரிசு கள் வழங்கினார். இதில் வேர்ல்டு விஷன் திட்ட இணை இயக்குநர் சாம்சன் பன்ட்டு, வேளாண் உதவி இயக்குநர் முருகன், மயிலாடும் பாறை சார்பு ஆய்வாளர் ராமசாமி, மயி லாடும்பாறை ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை மக்கள் தொடர்பு அலுவலர் வேல்முருகன், வேர்ல்டு விஷன் திட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் ஜான் ஜோதி விருமாண்டி செய்தி ருந்தனர்.