திருச்சுழி அருகே கூடுதலாக கனிமவளம் வெட்டியெடுப்பு 20 பேர் மீது வழக்கு
திருச்சுழி, அக்.,8- திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு பகுதியில் அனுமதித்த கால அளவை கூட கூடுதலாக சட்ட விரோத மாக கனிமவளங்களை வெட்டி எடுத்த 10 பேர் மீது போலீ சார் வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ளது பண்ணை மூன்றடைப்பு கிராமம். இங்கு புல எண் 87 இல் சட்ட விரோதமாக அரசு வழங்கிய கால அளவையும் தாண்டி சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்பட்டது. எனவே, இதுகுறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் தங்கமுனியாமி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மயில்வாகனம் மற்றும் லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டு நர்கள் என மொத்தம் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் புல எண் 123/7 பகுதியில் சட்ட விரோதமாக கனிம ளங்களை வெட்டி எடுத்த பண்ணை மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த ரேணுகா தேவி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த விஜய லட்சுமி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் பணியிட மாற்றம்
திருவில்லிபுத்தூர், அக்.8- திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சியில் காந்தி பிறந்தநாளன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வேப்பங்குளத்தை சேர்ந்த அம்மை யப்பன் என்கிற விவசாயியை, ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் காலால் எட்டி உதைத்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும் ஊடகங்கள், பத்திரிகைகளில் செய்தியாக வெளி யானது. இதைத்தொடர்ந்து வன்னியம்பட்டி காவல் நிலை யத்தில் அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில், தங்கபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வா ளர் சங்கர் கண்ணன், வன்னியம்பட்டி சார்பு ஆய்வா ளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விருதுநகர், அக்.,8- விருதுநகரில் நகராட்சி குத்தகைதாரர் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் மீது குண்டர் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகரில் மீன்மார்க்கெட் அருகே உள்ள மாம்பழ பேட்டையில் குமரவேல் என்பவர் இருந்த போது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்தது. அப்போது தடுக்க வந்த ராம்குமார், ரூபி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இதையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரது மகன் பால்பாண்டி என்ற பவர்பாண்டி(24), சிவகாசி காமராஜர் காலனியைச் சேர்ந்த முத்துவிஜயன் மகன் செல்வம்(19), இராஜபாளையம் கிறிஸ்துராஜாபுரத்தைச் சேர்ந்த ஜோசப் மகன் அந்தோணி(25), சிவகாசி, சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் முருகன்(எ) முருகானந்தம்(21), விருதுநகர், சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வெங்கடேஷ்(எ) வெங்கடேசன்(25), கட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் பாத முத்துகுமார்(19), கருப்பசாமி நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் விஜயகுமார்(28) ஆகியோரைக் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 7 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மின் வேலியை தொட்ட பெண் காயம் இருவர் மீது வழக்கு
விருதுநகர், அக்.,8- விருதுநகர் அருகே கூரைக்குண்டில் தோட்டத்தில் போடப்பட்ட மின் வேலியைத் தொட்ட பெண் காயம டைந்தார். விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு கிரா மத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி(28). இவர் ஆடு, மாடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில், தனியார் தோட்டத்திற்குள் ஆடுகள் செல்ல முயன்றதாம். அப்போது, அதை தடுக்க பண்டிச்செல்வி சென்ற போது, அங்கிருந்த மின் வேலியில் கைபட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சூலக்கரை போலீசார் தோட்டத்தில் வேலி அமைத்த நெரங்நாயகி, வீர பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.
அக்.10 மதுரை மண்டலம் 1-ல் பொதுமக்கள் குறைதீர் முகாம்
மதுரை, அக்.8- மதுரை மாநகராட்சி மண்டலம் - 1இல் செவ்வாயன்று (அக்டோபர் 10) ஆனையூர் பேருந்து நிலையம் அருகில் மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்தி ராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மண்டலம் 1 (கிழக்கு) உட்பட்ட வார்டு 1 முதல் 14 மற்றும் வார்டு 16 முதல் 19 மற்றும் வார்டு 36 முதல் 40 வரை உள்ள வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
ராபி பருவ பயிர்களை காப்பீடு செய்திட வேளாண்மைத்துறை அறிவுறுத்தல்
விருதுநகர், அக்.8- விருதுநகர் மாவட்டத்தில் ராபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலம் உடனடியாக காப்பீடு செய்து கொள்ள வேண்டுமென வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வேளாண் பயிர்களான சம்பா-நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.394, மக்காச்சோளத்திற்கு ரூ.317, சோளம் ரூ.135, கம்புரூ.160, பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.210, பருத்தி ரூ.508, நிலக்கடலை ரூ.312, எள்ளுக்கு ரூ.120, சூரியகாந்தி ரூ.187 எனவும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களான கொத்த மல்லிக்கு ரூ.575, மிளகாய் ரூ.1018, வெங்காயம் ரூ.1765, வாழைக்கு ரூ.3445 ஆகும். விருதுநகர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய நவம்பர் 15 கடைசி நாளாகும். மேலும், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்திக்கு நவம்பர் 30ம், சம்பா-நெல் மற்றும் சோளம் பயிருக்கு டிசம்பர் 15ம், நிலக்கடலை மற்றும் சூரிய காந்திக்கு டிசம்பர் 30ம், எள் பயிருக்கு 2024 ஜனவரி 31 வரை காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களான கொத்தமல்லிக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் 2024 ஜனவரி 18ம், மிளகாய் மற்றும் வெங்காயத்திற்கு ஜனவரி 31 எனவும், வாழைக்கு பிப்ரவரி 29 கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் முன்மொழிவு விண்ணப் பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலு வலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.