விருதுநகர், ஜன.24- சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால், குடும்ப அட்டை மற்றும் வாக் காளர் அடையாள அட்டைகளை ஒப்ப டைக்கப் போவதாக மக்கள் தெரிவித்துள் ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறிய தாவது: சிவகாசி ஒன்றியம், புதுக்கோட்டை கிராமம், கீரையாபுரம், மேலத் தெருவில் உள்ள ஆண்களுக்கான குளியலறை மோட் டார்கள் மற்றும் சிண்டெக்ஸ் தொட்டிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. ஏராள மான தெரு விளக்குகள் எரியவில்லை. இரவு நேரத்தில் பெண்கள் வெளியே நடமாட முடி யாத நிலை உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வரும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தை புறக்க ணித்து, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேசன் கார்டுகளை ஒப்படைப்போம் எனத் தெரிவித்தனர்.